Tuesday, April 21, 2009

குழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா?

உங்கள் குழந்தைகளை கிரீச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா?

பழக்க படாத இடம் போனதும் அழும், ஆகையால் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் விடுங்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டவும்.

அங்கும் புதிதாக போன இடத்தில் சாப்பிட பிடிக்காது.
அதுவும் கொஞ்சம் டைம் எடுக்கும்.
இல்லை நீங்கள் இரண்டு நாட்களுக்கு கூட போய் அங்கு இருங்கள் ஓரளவிற்கு பழக்க படுவார்கள்.
அங்கு இருந்து கொன்டு நீங்கள் அவர்களை கூப்பிட போகும் போது உங்களை பார்த்ததும் சில பிள்ளைகள் கேவி கேவி தொண்டை அடைத்து கொண்டு அழுகை வரும்.


அதற்காக பார்த்து கொள்பவர்களை தப்பாக எண்ண கூடாது.

குழந்தைகளில் பல வகை

சில குழந்தைகள் யார் கிட்ட வேண்டுமனாலும் போவார்கள், சாப்பிட்டு கொள்வார்கள்.
ஆனால் சில குழந்தைகள் யார் புது ஆட்களை பார்த்தாலும் உங்களுடன் வந்து பசை போல் வந்து ஒட்டி கொள்வார்கள்.

சில குழந்தைகள் பேசாமல் இருக்கும் சில குழந்தைகள் யோசித்தபடியே இருக்கும்.

கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ போக‌ ச‌ரியாகிடும் எப்ப‌டியும் ஒரு மாத‌ம் பிடிக்கும் அங்கு அவ‌ர்க‌ள் ப‌ழ‌குவ‌த‌ற்கு, அது வ‌ரை நீங்க‌ள் பொருமையாக‌ இருக்க‌வேண்டும்.

No comments: