அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Thursday, December 31, 2009
Wednesday, December 16, 2009
குழந்தைகள் திடீரென்று அழுதால்
1. குழந்தைகள் திடீரென்று அழுதால் ஏதாவது பூச்சி கடித்திருக்கும். குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. அதில் பூச்சி , எறும்பு இருந்தால் உடனே தெரியும்.
2. உடனே பக்கத்தில் உள்ள அனைத்து துணிகளையும் நல்ல உதரி போடுங்கள். ஏதும் எறும்பு இருக்கான்னும் பார்க்கவும்.
3. காசு சில்லரை காசுகள் குழந்தைகள் உள்ள இடத்தில் ஆங்காங்கே வைக்காதீர்கள். அது போல பெரிய குழந்தைகளிடம் காசு கொடுத்தாலும் குழந்தைகளிடம் கொடுத்து விளையாட கொடுப்பார்கள். இதனால் குழந்தைகள் அதை எடுத்து வாயில் போட்டு கொண்டால் பல விபரீதம் நடக்க வாய்ப்பிருக்கு.
4. வயிற்று வலியா இருந்தாலும் அழுவார்கள், அதற்கு வயிற்றில் எண்ணை தடவிவிட்டு, கொதித்து ஆறிய வெண்ணீரை பாலைடயிலோ (அ) ஸ்பூனாலோ ஊற்றி விடுங்கள் கொஞ்சம நேரத்தில் சரியாகிடும்.
5. ஆகையால் தான் நல்ல சப்போட் கொடுத்து அடக்கமா தூங்க வைத்து அழக்குங்கள்.
6. ஒரே தூக்கி பழக்க படுத்தி கையிலேயே வைத்து தூக்கி பழக்க படுத்தியவர்கள் கொஞ்சம் அவர்களை விட்டு நகர்ந்தாலும் உடனே வீல்லென்று சத்தம் வரும்.
7. அடுத்து அடுத்து இரண்டு குழந்தை உள்ள வீட்டில் பெரிய குழந்தை கூட சின்ன குழந்தையையே கொஞ்சுகிறார்களே என்ற பொறாமையில் கைய கால கூட இழுத்து விட்டு விடுவார்கள்.அதையும் ஜாக்கிரதையா கண்காணிக்கனும்.
8. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கு கிறார்களோ அவ்வளவு நல்லது. அதற்குன்னு வயிற்றுக்கு கொடுக்காமல் அப்படியே விடக்கூடாது. ஒரு மணி நேர்த்திற்கு ஒரு முறை பார்த்து காலை சுரன்டி விட்டால் (அ) காது மடலை லேசாக தொட்டால் கொஞ்சம் எழுந்திருப்பர்கல் வயிற்றை நிறைத்து மறு படி ஏப்பம் விட வைத்து தூங்க போடவும்.
9. பாத்ரூம் (ஒன், டு) போய் விட்டால் கூட அழுவார்கள் அதையும் அப்ப அப்ப செக் பண்ணி மாற்றி விடுங்கள்.
10. குழந்தைகளை பேனுக்கு நேரா படுக்க வைக்காதீர்கள்.எப்போதும் கொஞ்சம் சரிவலாக படுக்க வையுங்கள்.அப்படி நேராக படுக்க வைத்தால் நெஞ்சின் மேல் ஒரு டவலை மடித்து மேலே வையுங்கள்.
//இது சுதாகர் சார்( பித்தனைன் வாக்கு) பின்னூட்டத்தில் சொன்னது இதையும் சேர்த்துள்ளேன். இந்த டிப்ஸ் சிலருக்கு பயன் படும்.//
நல்ல கருத்துக்கள். நல்ல தகவல்கள். நன்றி ஜெலில்லா. ஒரு விஷயம் விடுபட்டு விட்டது. அதுவும் இணைத்து விடுங்கள். பெரும்பாலும் குழந்தைகள் வயிறு உப்புசம் அல்லது வாயுவினால் வயிறு வீக்கம் கண்டு கூட அழுவார்கள். அப்போது அவர்கள் வயிற்றை அமுத்திப் பார்த்து, நல்ல எண்ணெய் அல்லது உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் அல்லது ஓமத்தண்ணீர் கொடுத்து, வயிற்றை ஏப்பம் விடும் வரை தடவிக் கொடுக்கவும். அம்மாவின் ஆகாரக் கோளாறினால் பிள்ளைக்கு இந்த சங்கடம் வரும். நன்றி.
Wednesday, November 4, 2009
பேட்மிட்டனில் ஆஃப்தாப் - அபுதாபி
Saturday, October 24, 2009
கரு கருவென குழந்தைகளுக்கு முடி வளறனுமா?
பிறந்த முடி இரக்கியது சில பேர் முதல் பிறந்த நாள் வருது, அடுத்து ஸ்கூல் சேர்க்கனும் என்று ஒரு தடவை மொட்டை போடுவதோடு மறுபடி போடுவதில்லை.
அப்படி இல்லாமல் மொட்டை அடித்ததும் உடனே வாரம் ஒரு முறை தொடர்ந்து மொட்டை அடித்தால் மண்டையில் கத்தி பட பட நல்ல முடி வளற ஆரம்பிக்கும். சின்ன வயதிலேயே அடிக்கடி தொடர்ந்து மொட்டை போட்டு விடுங்கள்.
இப்படி செய்வதால் பிற்காலத்தில் சொட்டை மண்டை பிரச்சனை வராது.
அதோடு கொசுறு கருவேப்பிலை முடி வளற நன்கு பயனளிக்கும். கருவேப்பிலை சிறு வயதிலிருந்தே அரைத்து ரசம், இட்லி பொடி குழம்புகளில் சேர்த்து அரைத்து கொடுத்து வரவும்.
Tuesday, October 13, 2009
இரண்டாவது குழந்தை படும் பாடு
முதல் குழந்தையிடம் இருந்து இரண்டாவது குழந்தையை காப்பாத்தி கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் கல்யாணம் ஆனதும் பிறக்கும் முதல் குழந்தையின் மேல் பாசத்தை கொட்டி சிலர் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்கின்றனர்.
சில வருடம் முன்று நான்கு வருடம் சென்றதும் அடுத்த குழந்தை பெறும் போது, முதல் குழந்தையிடம் உள்ள பாசம் குறைகிறது. நீங்கள் பாசத்தோடு தான் இருப்பீர்கள் ஆனால் குழந்தை அப்படி நினைத்து கொள்ளும்
எப்படியும் முதல் குழந்தைக்கு பொறாமை வரும். புது டிரெஸ் வாங்கினால், பால் பாட்டில் வாங்கினால் கூட பொறாமையா இருக்கும்.
இது இப்ப லேட்டஸ்டா நடந்து கொண்டு இருக்கு.
யாரும் இல்லாத போது தூளியில் படுத்திருக்கும் குழந்தை மண்டைய இடிச்சி விடுவது, போய் கடித்து வைப்பது இது போல் எல்லாம் செய்கிறார்கள்.
என்னேரமும் கண் கொத்தி பாம்பு போல் பிள்ளைகளை கவனிக்க வேண்டியதா இருக்கு இப்ப உள்ள பிள்ளைகளை.
மடியில் வைத்து கொஞ்சினால் கூட அவர்களுக்கு பிடிக்காது. ஏதாவது சாமானை தூக்கி அடிப்பார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் பொறாமையால் அவர்கள் ரொம்ப காலமாக பேசாமல் கல்யாணத்திற்கு பிறகு தான் பேசி இருக்கிறார்கள்.இதேல்லாம் கேள்வி படும் போது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும்.
அதே நேரம் முதல் குழந்தையையும் சரியான முறையில் ஆதரியுங்கள்.
என்ன வாங்கி கொடுப்பதாக இருந்தாலும் முதல் குழந்தைக்கும் சேர்த்து வாங்கி கொடுங்கள்.
பள்ளி செல்லும் பிள்ளையாக இருந்தால் ஒரளவிற்கு புரிந்து கொள்வார்கள் எடுத்து சொல்லுங்கள்.
இது போல் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.
Tuesday, August 18, 2009
நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
பல பல ப்ளாகுகள் தனியாக வைத்துக்கொண்டு, தனி தனியா போஸ்டிங் செய்ய கஷ்டமாக இருப்பதால், அனைத்தும் ஒன்றாக, இந்த ப்ளாகுக்கு மாற்றி விட்டேன். எல்லோரும் அந்த ப்ளாகில் ஃபாலோவர்ஸாக இணைந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
http://allinalljaleela.blogspot.com
http://allinalljaleela.blogspot.com
Friday, August 7, 2009
குழந்தைகளின் நகத்தை
1. குழந்தைகளின் நகத்தை உடனே உடனே வெட்டி விட வேண்டும்.
ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், ஷாஃப்ட் நகவெட்டி வைத்து இல்லை என்றால் குளித்து முடித்ததும் அவர்களின் கையை ஈர படுத்தி லேசாக நாம் கடித்தால் உடனே வந்துவிடும்.
2. நகத்தை வெட்ட வில்லை என்றால் முகம் முழுவதும் கீறிக்கொண்டு ஒரே வீல் வீல் என்று அழுவார்கள்.
உங்களுக்கும் பார்த்தால் ஒன்றும் புரியாது எதற்காக அழுகிறார்கள் என்பது, எங்கே கீறியதும் என்பதும் புரியாது.
ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், ஷாஃப்ட் நகவெட்டி வைத்து இல்லை என்றால் குளித்து முடித்ததும் அவர்களின் கையை ஈர படுத்தி லேசாக நாம் கடித்தால் உடனே வந்துவிடும்.
2. நகத்தை வெட்ட வில்லை என்றால் முகம் முழுவதும் கீறிக்கொண்டு ஒரே வீல் வீல் என்று அழுவார்கள்.
உங்களுக்கும் பார்த்தால் ஒன்றும் புரியாது எதற்காக அழுகிறார்கள் என்பது, எங்கே கீறியதும் என்பதும் புரியாது.
Wednesday, August 5, 2009
குழந்தைகளுக்கு ரோஸி லிப்ஸ் வேண்டுமா?
1. குழந்தைகளுக்கு பால் கொடுத்து முடித்ததும் கண்ட துணியில் துடைக்க கூடாது வெல்லை (அ) சிவப்பு மல் துணி (மெல்லிய துணி - லைனிங் கொடுக்கும்) கொண்டு துடைக்க வேண்டும்.
2. அதே போல் நாக்கில் பால் குடித்து வெள்ளையாக பூத்திருக்கும், அதை மெல்லிய மல் துணியை நீரில் நனைத்து உங்கள் ஆள் காட்டி விரலில் மாட்டி கொண்டு குழந்தைகளின் நாக்கில் வைத்தால் அவர்கள் கையை சப்புவது போல் சப்புவார்கள், நாக்கில் பூத்திருக்கும் வெள்ளை படிவம் துணியோடு வந்து விடும்.
ஜலீலா
(தொடரும்)
2. அதே போல் நாக்கில் பால் குடித்து வெள்ளையாக பூத்திருக்கும், அதை மெல்லிய மல் துணியை நீரில் நனைத்து உங்கள் ஆள் காட்டி விரலில் மாட்டி கொண்டு குழந்தைகளின் நாக்கில் வைத்தால் அவர்கள் கையை சப்புவது போல் சப்புவார்கள், நாக்கில் பூத்திருக்கும் வெள்ளை படிவம் துணியோடு வந்து விடும்.
ஜலீலா
(தொடரும்)
Sunday, August 2, 2009
குழந்தைகளை உஷாராக கண்காணிக்கனும்
குழந்தைகளை உஷாராக கண்காணிக்கனும்.இல்லை என்றால்
கண் இமைக்கும் நேரத்திற்குள் என்ன என்னவோ செய்வார்கள்.
குழந்தைகள் இருக்கும் இடத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக கண்காணிக்கவும்.
பிரிட்ஜ், கிச்சன் கேபினெட்,பீரோ , மின்சார வொயர்கள் எல்லாத்தை சரியாக இருக்கிறதா என்று அப்ப அபப் செக் பண்ணி கொண்டே இருக்கனும்.
பிரிட்ஜில் உள்ள் பொருட்களை இழுத்து போடுவார்கள்.சாப்பாட்டு பொருட்கள் அதிகமாக இருப்பதால் சப்பு கொட்டி கொண்டு அதை எட்டி பார்க்க ஓடுவார்கள்.
கிச்சன் கேபினேட்டில் கத்தி, கத்திரிகோல், ஊறுகாய் பாட்டில்கள் எல்லாத்தையும் இழுத்து போடுவார்கள்.
டீவி, மிசி,போன் சார்ஜ் செய்யும் வொயர்களை எடுத்து கடித்து கொண்டு இருப்பார்கள்.
பீரோவில் அப்ப தான் துணியை அடுக்கி வைப்பீர்கள் உடனே அவர்களும் அம்மாவை போல் வேலை பார்ப்பதாக எண்ணி ரொம்ப கவலையா எல்லாத்தையும் இழுத்து போடுவார்கள்.
பவுடர் டப்பா கிடைத்தால் போது வாயால் கடித்து ஓப்பன் செய்து அவ்வளத்தையும் கொட்டி அதில் சர்க்கஸ் செய்வார்கள்.
Haneef, Ismail
வீடு துடைக்கும் போது கூட உங்கள் கண்பார்வையிலேயே ஓர் உயரமான இடத்தில் உட்காரவைத்து விட்டு துடைக்கலாம்.
கதவில் சாவியை வைக்காதீர்கள் குழந்தைகளுக்கு எழுந்து நடக்கும் போது முதலில் கண்ணில் தென்படுவது கதவில் உள்ள சாவி தான் உள்ளே இருந்து பூட்டி கொள்வார்கள். பிறகு நீங்கள் வெளியில் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அல்லாட வேண்டியது தான். இந்த சம்பவம் எல்லா இடத்திலும் நடந்திருக்கு இதை நான் நேரில் பார்த்துள்ளேன்.
கேள்வி பட்டும் இருக்கிறேன். அப்படிதான் அபுதாபியில் எல்லாம் உயரமான கட்டிடம் ஆறாவது எட்டாவது மாடியில் ஒரு பிளாட்டில் ஒரு குழந்தை இதே போல் பூட்டி கொண்டது.ஏதாவது சத்தம் கொடுத்தால் ஜன்னல் வழியே குதிக்க கூட செய்யும் நம்மை தூக்க வருகிறார்கள் என்று ஒடி ஒளிவார்கள், உடனே அந்த குழந்தையின் தாய் பக்கத்து வீட்டு ஜன்னலில் இருந்து இந்த ரூமினுல் குதித்து வந்து குழந்தையை தூக்கி கொண்டு கதவை திறந்து வெளியில் வந்தார்கள்.
ஆனால் அந்த தாய் எங்கிருந்து காப்பாத்தினார்கள் என்று வந்து எட்டி பார்த்தா யாராலும் அந்த ஜன்னலிலிருந்து பக்கத்து ஜன்னலுக்கு குதிக்க முடியாதாம் எட்டி பார்த்தா தலை சுற்றுகிறதாம், அந்த தாய் உயரத்தை பார்த்து இருந்தால் காபபத்தி இருக்க முடியாது, அவர் எண்ணம் எல்லாம் ரூமிற்குள் எப்படி செல்வது என்று மட்டும் தான் இருந்தது.
//இதில் இன்னும் நிறைய பாயிண்டுகள் இருக்கு இப்போதைக்கு இதே நிறிஅய போட்டு விட்டேன் என்று நினைக்கிறேன், இது என் குழந்தை வளர்பு பிளாககில் பதிவுகள் போட முடியாததால் இதில் போட்டுள்ளேன்..//
Monday, July 13, 2009
குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?
குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது?
வெளி நாடுகளில் காற்றோட்டம் கிடையாது 24 மணி நேரமும் ஏசி உள்ளேயே அடைபட்டு கிடப்பதால் கண்ணுக்கு தெரியாத தூசிகள் நிறைய வீட்டுக்குள்ளேயே நிறைய் இருக்கும்.
குழந்தைகள் தவழும் வயதில் கீழே இரக்கி விட்டதும் முதலில் அவர்கள் ஓடி போய் ஒளிவது கட்டில், சோபா, சேர் அடியில் தான்அவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களும் அங்கு தான் போய் சேரும் அதை எடுக்க செல்வார்கள், அங்குள்ள தூசியை முகர்ந்து கொண்டு வருவதால் தான் வீசிங் ஏற்படுகிறது.
இப்படி தான் ஒருவர் வீடு காலி பண்ணிட்டு ஊருக்கு போவதா இருந்தாங்க குழந்தைக்கு ஆறு மாதம். எல்லா சாமனையும் பேக்கிங் செய்து கொண்டு இருக்கும் போது பெட்டின் அடியில் உள்ள பெட்டி எடுத்து அந்த இடம் காலியாக இருக்கவே அந்த குழந்தை உள்ளே ஓடி ஓடி விளையாடி ஒளிந்து விளையாடி கொண்டு இருந்தது. இரண்டு நாள் கழித்து அந்த பையனுக்கு நிலைமை மோசமாகி முச்சு திணறி நெபுலைசர் வைக்கும் நிலை பாவம் வீடும் காலி பண்ணனும், ஊருக்கு கிளம்பனும், காலை மாலை மாற்றீ மாற்றி போய் நெபுலைசரும் வைத்து விடனும், அந்த பொண்ணு ரொம்பவே தவித்து போய் விட்டாள்.
கடைசியில் இரவு பயணம், உள்ளே போனா பிளைட்டில் ஏற்ற மாட்டேன் அந்த நெபுளைசர் மிஷினோடு வந்தால் தான் ஏற்றுவேன் என்று சொல்லி விட்டார்கள்.அந்த ராத்திரியில் கூடே போனவர்கள் அலைந்து திரிந்து வேறு ஏதோ ஒரு சாதம் வாங்கி வந்து போய் ஊருக்கு போய் சேர்ந்தார்கள்.
ஆனால் இன்னும் அந்த பையனுக்கு டஸ்ட் பக்கம் போனால் , குளிர் காலத்தில் வீசிங் வருகிறது.
எந்த வேலை பார்த்தாலும் குழந்தை மேல் எப்போதும் ஒரு கண்ணு வைத்து கொண்டே இருங்கள். வீட்டையும் சுத்தம் செய்வது நல்லது, சிலரால் முடியாது.நேரத்தை சரியாக பயன் படுத்தி வேலைகளை பிரித்து செய்தால் எல்லாம் சரியாக அமையும்.
Saturday, July 11, 2009
அண்ணா தம்பி , ஹனீப்
முன்று பேரும் சேர்ந்து ஒரே கம்புட்டரில் கேம், அதுக்கு கண்ணு இருந்த அது கூட அழுதிருக்கும்.
பச்ச குழந்தை என்றாலே எல்லோருக்கும் ஆசை தான் /
ஆண்டி ஆண்டி நான் கொஞ்சம் நேரம் வைத்து கொள்கிறேன்.என் பையன் ஹனீப் சொன்னான். மடியில் வைத்தது சந்தோஷம் தாங்கல அத நான் போட்டோ வேறு எடுப்பதால் ஒரு சிரிப்பு + போஸ் வேறு கண்ணை விரித்து கொண்டு...
அடுத்து அண்ணா தம்பி இவர்கள் இரண்டு பேருடைய பேச்சுக்களை சொன்னால் சொல்லி கொண்டே போகலாம்.
அவர்கள் ஒருவரை ஒருவர் கூப்பிட்டு கொள்வதே அண்ணா ஆ ஆஆ
தம்பி பீ பீ பீ என்று தான் அது வீட்டுக்கு வர எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஆண்டி ஆண்டி நான் கொஞ்சம் நேரம் வைத்து கொள்கிறேன்.என் பையன் ஹனீப் சொன்னான். மடியில் வைத்தது சந்தோஷம் தாங்கல அத நான் போட்டோ வேறு எடுப்பதால் ஒரு சிரிப்பு + போஸ் வேறு கண்ணை விரித்து கொண்டு...
அடுத்து அண்ணா தம்பி இவர்கள் இரண்டு பேருடைய பேச்சுக்களை சொன்னால் சொல்லி கொண்டே போகலாம்.
அவர்கள் ஒருவரை ஒருவர் கூப்பிட்டு கொள்வதே அண்ணா ஆ ஆஆ
தம்பி பீ பீ பீ என்று தான் அது வீட்டுக்கு வர எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
உடனே ஹனீப் தம்பிய வச்சுக்குறான், தம்பி வா குட்டி தம்பிய வச்சு போட்டோ எடுதுக்கலாம்.
தம்பிக்கு தலைவலிக்கு தான் ஆஃப்தாப் கொஞ்சம் தைலம் தேச்சு விடுமா.. என் தங்கை சொல்ல உடனே தம்பீ இங்க வா தைலம் தேய்க்கிறேன்.
உடனே தம்பி படுத்து கொண்டே நீ வேணும்நா இங்க வந்து தடவி விடு....
சின்னதுக்கு ரொம்பவே குசும்பு ஜாஸ்தி....
அடுத்து லைட் போட்டா குட்டி தம்பி முழித்து விடுவான் போய் கொஞ்சம் தண்ணீ கொண்டு வாம்மா...
சத்தமா தம்பீ குட்டி தம்பி தூங்குறா போ போய் தண்ணீ கொண்டு வா,
கடைசியில் இரண்டும் இருட்டில் போக ஒரு டார்ச் நல்ல வெளிச்சமா போட்டு கொண்டு நல்ல குழந்தை முகத்தில் அடித்து கொண்டு தண்ணிய கொடுத்தார்களாம்.
Friday, July 10, 2009
குழந்தைக்கு மசாஜ் மற்றும் ஆயில் பாத்
1. முதலில் ஒரு இரண்டு மூன்று பெரிய பேப்பர் எடுத்து கொண்டு அதில் குழந்தையை படுக்க வைத்து எண்ணையை தடவுங்கள்.துணியில் என்றால் எண்ணை பிசுப்பாகிடும். அதை துவைக்க நேரம் எடுக்கும்.
2. தலைக்கு சிறிய தலையனை (அ) டர்கி டவலை நான்காக மடித்து தலைக்கு வைத்து கொள்ளுங்கள்.
3.ஜான்சன்ஸ் பேபி ஆயில் (அ) ஆலிவ் ஆயில் தேய்த்து மெதுவாக பூவை தொடுவது போல் மசாஜ் செய்யுங்கள்.இப்படி செய்வதால் கால் முட்டி, நரம்புகள் வலுவடையும்.15 நிமிடம் ஊறினால் போதும் உடனே வெது வெதுப்பான நீரில் குளிக்கவையுங்கள்.குளிக்க கொண்டு செல்லும் போதே உங்கள் தோள் பட்டையி டவல் இருக்கட்டும்.குளிக்க வைத்து உடனே தோள்பட்டையில் உள்ள டவல் மேல் போட்டு அபப்டியே மூடி கொண்டு போய் பெட்டில் போடு நன்கு துடைக்கவும்.பேனை ஆஃப் பண்ணிவிடவும்.
4. இப்போது நல்ல வயிற்றை நிறைத்து , ஏப்பம் விட விட்டு பெரிய டவல் கொண்டு நன்கு இரண்டு கைபுறம், கால் புறம் சேர்த்து கட்டுவது போல் கொண்டு வந்து பெட்டில் நாலா பக்கமும் தலையன் வைத்து தூங்க வையுங்கள்.(ஓவ்வொரு முரை பால் கொடுக்கும் போதும் நீங்கள் சூடான பானம் ஏதாவது குடித்து கொள்ளுங்கள்.(சூப், ஹார்லிக்ஸ், பால்,போஸ்ட், போன்வீட்டா, ராகி, அல்ல்து வெண்ணீர்)
5. வாரத்திற்கு முன்று நாட்கள் ஆயில் மசாஜ் செய்தால் போதும்.
ஜலீலா
(தொடரும்)
Wednesday, July 8, 2009
பேட்மிட்டனில் ஆஃப்தாப் - துபாய்
Monday, July 6, 2009
சமையலறையில் குழந்தை
குழந்தைய கையில் வைத்து கொண்டு சமைக்காதீர்கள்.
அது பெரும் ஆபத்து.
அதுவும் போன் காதில், ஒரு கையில் குழந்தை, ஒரு கையில் கரண்டி இதேல்லாம் ரொம்ப வே ஆபத்தில் முடியும்.
கொஞ்சம் குழந்தை எகிறினாலும், நிலைமை ரொம்பவே மோசம்.அதே போல் தூக்க கலக்கத்திலும் போய் பால் காய்ச்சாதீர்கள்.
எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு 10 வருடம் முன். காலையில் தூக்கத்தில் போய் பாலை காய்ச்சி என்று புரியமல் தன் வயிற்றில் கொட்டி கொண்டு வயிறு, தொடை எல்லாம் பொத்து கொண்டது.ஃப்பார்மசியில் ஒரு கீரிமை வாங்கி தடவினார்கள்.
அது ஆண்களுக்கு கொடுக்கும் ஆயிண்மெண்டாம், பெண்களுக்கும் , ஆண்களுக்கும் அவர்கள் சருமத்திற்கு ஏற்றவாரு மருந்துகள் இருக்கும்.அந்த ஆயிண்ட்மெண்ட் போட்டதில் மேலே எல்லாம் மீண்டும் கொப்புளம் அதிகமாகி விட்டது.டாக்டர் கிட்ட போனால் போலீஸ் கேஸாகிடும் என்று பயந்து அந்த பெண் வீட்டிலேயே இரண்டு மாதமாக டிரெஸ்ஸும் போட முடியாமல், குழந்தைக்கு வெரும் ரெடிமேட் புட் அவங்க ஹஸு காலையில் வைத்து விட்டு போகும் நூடுல்ஸுமா கழித்தார்கள்.
இன்னொரு அறையில் பேச்சுலர் தங்கி இருந்ததால் பாத்ரூமும் போக முடியாமல்.ரொம்பவே அவஸ்தை பட்டுள்ளார். பிள்ளைக்கு காலையில் இருந்து இரவு பேம்பரும் மாற்ற முடியாமல் தவித்தார்கள்.கேட்டு விட்டு ரொம்ப கலங்கி போய் விட்டோம். எல்லாம் சரியான பிறகு தான் எனக்கு தெரிந்தது, போய் பார்த்து வந்தோம்.
அது ஆண்களுக்கு கொடுக்கும் ஆயிண்மெண்டாம், பெண்களுக்கும் , ஆண்களுக்கும் அவர்கள் சருமத்திற்கு ஏற்றவாரு மருந்துகள் இருக்கும்.அந்த ஆயிண்ட்மெண்ட் போட்டதில் மேலே எல்லாம் மீண்டும் கொப்புளம் அதிகமாகி விட்டது.டாக்டர் கிட்ட போனால் போலீஸ் கேஸாகிடும் என்று பயந்து அந்த பெண் வீட்டிலேயே இரண்டு மாதமாக டிரெஸ்ஸும் போட முடியாமல், குழந்தைக்கு வெரும் ரெடிமேட் புட் அவங்க ஹஸு காலையில் வைத்து விட்டு போகும் நூடுல்ஸுமா கழித்தார்கள்.
இன்னொரு அறையில் பேச்சுலர் தங்கி இருந்ததால் பாத்ரூமும் போக முடியாமல்.ரொம்பவே அவஸ்தை பட்டுள்ளார். பிள்ளைக்கு காலையில் இருந்து இரவு பேம்பரும் மாற்ற முடியாமல் தவித்தார்கள்.கேட்டு விட்டு ரொம்ப கலங்கி போய் விட்டோம். எல்லாம் சரியான பிறகு தான் எனக்கு தெரிந்தது, போய் பார்த்து வந்தோம்.
அப்படி வேற வழியில்லை என்கிற போது கண்ணெதிரில் நிறைய சாமான்கள் கொடுத்து விளையாட விட்டு வேலை பாருங்கள்.
இல்லை டைம் பிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள் இந்த நேரத்திற்குள் வேலைய முடிக்கனும் என்று.
இல்லை டைம் பிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள் இந்த நேரத்திற்குள் வேலைய முடிக்கனும் என்று.
குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு தனி அறையில் விடாதீர்கள்.தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடுவார்கள்.சமைக்கும் முன் குழந்தையை குளிக்கவைத்து வயிற்றை நிறைத்து தூங்க வைத்தால் கண்டிப்பாக ஒரு மணி நேரமாவது தூங்குவார்கள். அந்த நேரத்தில் கூட சமையலை முடிக்கலாம்.
வேலையை சுலபமாக்க இரண்டு நாளைக்கு சேர்த்து சமைத்து கொள்ளுங்கள்.
அல்லது கணவர் வீடடில் இருக்கும் போது மற்ற வேலைகளை முடித்துக்கொள்ளுங்கள்.
நிறைய பேர் இப்போது இப்படி தான் சமைக்கிறார்கள் பத்த குறைக்கு சாட்டிங் வேறு.இத பெருமையா வேற சொல்லி கொள்வது குழந்தைய கையில் வைத்து கொண்டு தான் சமைத்து கொண்டே பேசுகீறேன் என்று..
எல்லாம் பட்டு விட்டு பின்னாடி அவஸ்தை படுவதை விட பிளான் பண்ணி வேலைகளை முடிப்பது நல்லது, இதனால் ஆபிஸில் கணவருக்கும் நிம்மதி போகும். லீவு போடவேண்டிவரும்.உடலளவில் பெரும் பாதிப்பு வேறு ஏற்படும்.
Monday, June 29, 2009
கேரட் ஜூஸ் குழந்தைகளுக்கு
தேவையான பொருட்கள்
கேரட் = ஒன்று
பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = ஒரு டம்ளர்
சர்க்கரை = ஒரு மேசை கரண்டி (அ) தேன்
செய்முறை
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை வடிக்கவும், மறூபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
அரைத்ததை வடிக்கவும், மறூபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
குறிப்பு:
குழந்தைகளுக்கு இதை ஆறு மாதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்கவும்.
முதலில் வெரும் ஆறிய வெண்ணீரில் செய்து கொடுக்கவும்.
இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.பிறகு எந்த பார்முலா மில்க் ஆரம்பிக்கிறீர்களோ அதில் கொடுக்கவும்.
பெரிய குழந்தைகள் என்றால் ஐஸ் கியுப்ஸ் போட்டு கொடுக்கலாம்.நல்ல ஒரு எனர்ஜி பானம்.
கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் தினம் அருந்தலாம்.
கர்பிணிபெண்கள் தினம் இதை குடிக்கலாம். குழந்தைக்கு நல்ல கலர் கிடைக்கும்.
முகத்தில் அரைத்தும் தேய்க்கலாம். முகம் பள பளக்கும்.
கர்பிணிபெண்கள் தினம் இதை குடிக்கலாம். குழந்தைக்கு நல்ல கலர் கிடைக்கும்.
முகத்தில் அரைத்தும் தேய்க்கலாம். முகம் பள பளக்கும்.
Sunday, June 28, 2009
ஆறு மாதத்திலிருந்து
ஆறு மாதத்திலிருந்து எல்லா உணவும் கொஞ்ச கொஞ்சமாக பழக்க படுத்தலாம். நல்ல மசித்து முன்று ஸ்பூன் அளவில் கொடுத்தால் போதும்.
ஆறு மாதம் முதல் லேசான காரம், புளிப்பு,இனிப்பு எல்லா சுவையையும் கொடுத்து பழக்க படுத்தனும்.
மில்க் பிக்கிஸ் பிஸ்கேட், மேரி பிஸ்கேட் கூட ஒன்று வெண்ணீரில் ஊறவைத்து ஊட்டி விடலாம்.
சாதம் நல்ல குழைய வேகவைத்து அதில் கீரை வெந்த தண்ணீர் சேர்த்து ஒரு சொட்டு நெய் உருக்கி சேர்த்து ஊட்டி விடவும்.
பிறகு பருப்பு வேகவைத்து அதையும் சேர்த்து சாததில் கலந்து நன்கு மசித்து கொடுக்கலாம்.
பருப்பு சிருபருப்பு சேர்த்து கொண்டால் நல்ல வெந்து விடும் ஈசியாக ஜீரணம் ஆகும்.
கிழங்கு வகைகளை வேகவைத்தும் ஊட்டி விடலாம்.
ஆப்பிலை வேக வைத்து தோல் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் அரைத்து ஊட்டி விடலாம்.
கிச்சிடி போல் அரிசியுடன் கேரட், உருளை, எலும்பில்லாத சிக்கன் சிறிது சேர்த்து பூண்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து வேகவைத்து மசித்து அல்லது மிக்சியில் கூழ் போல் அரைக்காமல் முக்கால் பதம் அரைத்து ஒரு விரலால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடவும்.
(தொடரும்)
ஆறு மாதம் முதல் லேசான காரம், புளிப்பு,இனிப்பு எல்லா சுவையையும் கொடுத்து பழக்க படுத்தனும்.
மில்க் பிக்கிஸ் பிஸ்கேட், மேரி பிஸ்கேட் கூட ஒன்று வெண்ணீரில் ஊறவைத்து ஊட்டி விடலாம்.
சாதம் நல்ல குழைய வேகவைத்து அதில் கீரை வெந்த தண்ணீர் சேர்த்து ஒரு சொட்டு நெய் உருக்கி சேர்த்து ஊட்டி விடவும்.
பிறகு பருப்பு வேகவைத்து அதையும் சேர்த்து சாததில் கலந்து நன்கு மசித்து கொடுக்கலாம்.
பருப்பு சிருபருப்பு சேர்த்து கொண்டால் நல்ல வெந்து விடும் ஈசியாக ஜீரணம் ஆகும்.
கிழங்கு வகைகளை வேகவைத்தும் ஊட்டி விடலாம்.
ஆப்பிலை வேக வைத்து தோல் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் அரைத்து ஊட்டி விடலாம்.
கிச்சிடி போல் அரிசியுடன் கேரட், உருளை, எலும்பில்லாத சிக்கன் சிறிது சேர்த்து பூண்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து வேகவைத்து மசித்து அல்லது மிக்சியில் கூழ் போல் அரைக்காமல் முக்கால் பதம் அரைத்து ஒரு விரலால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடவும்.
(தொடரும்)
Saturday, June 20, 2009
குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலுருந்து கொடுக்கும் உணவுகள்.
1.ஆப்பில் கேரட்
ஆப்பில் கேரட் இரண்டையும் நன்கு வேகவைத்து கட்டி தட்டாமல் மசித்து கொடுக்கவும்.
2.உருளை கிழங்கு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து தோலெடுத்து அதில் ஒரு சிட்டிக்கை அளவு
மிளகுதூள் சேர்த்து ஊட்டி விடவும்.
3.குழந்தைகளுக்கு நேந்திரன் பழத்தை வேகவைத்து மசித்தும் கொடுக்கலாம்.
4. சூடான சாதத்தை நன்கு மசித்து அதில் கீரை வேக வைத்த தண்ணீ, வேக வைத்த பருப்பு போன்றவை சேர்ந்து பிசைந்து ஒரு சொட்டு நெய் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
5.எப்போதும் குழந்தைகளுக்கு சிறிது பால் சாதம் பழக்க படுத்துவது நல்லது.
6. முட்டை புட்டிங் பால் சர்க்கரை , முட்டை சேர்த்து கலக்கி சின்ன டிபன் பாக்சில் வைத்து குக்கரில் இரண்டு மூன்று விசில் விட்டு வேக வைத்தும் ஊட்டி விடலாம்.
மெது மெதுவாக ஒவ்வொன்றாக ஆரம்பித்து அதை பழக்கத்தில் வைத்து கொள்ளனும்.
மெது மெதுவாக ஒவ்வொன்றாக ஆரம்பித்து அதை பழக்கத்தில் வைத்து கொள்ளனும்.
7. கிச்சிடி
அரிசி, பாசி பருப்பு , கேரட்,மிளகு தூள், பூண்டு, நெய் சேர்த்து நன்கு குக்கரில் மசிய வேகவைத்து கொடுக்கலாம்.இதில் சிறிய துண்டு சிக்கனும் சேர்த்து வேகவைக்கலாம்.
8. குழந்தைகளுக்கு சாதத்தை போட்டு அடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பது நல்லது.
ஒரு இடமா உட்கார வைத்து உணவு கொடுத்து பழக்குங்கள். கண்டிப்பாக கழுத்தில் பிப் (அ) ஒரு காட்டன் துணியை கட்டி கொள்ளவும்.
Thursday, June 11, 2009
குழந்தைகளுக்கு 4 மாதத்திலிருந்து உணவு பாகம் = 1
1.பிறந்த குழந்தைக்கு தாய் பாலே சிறந்தது.அதிக வெயில் காலத்தில் குழந்தைகள் தொண்டை வறண்டு போகும், இல்லை வயிற்று வலி,வயிறு கல்லு மாதிரி ஆகும் இதற்கெல்லாம் நன்கு காய்ச்சிய ஆறிய வெண்ணீரைசிறிய தேக்கரண்டி அல்லது பாலாடையால் இரண்டு மூன்று சொட்டு காலை 11 மணி அளவில் கொடுக்கலாம்.
2. அடுத்து செரிலாக் ஆரம்பிப்பார்கள் அது 4 மாதத்திலிருந்து கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.கேழ்வரகு காய்ச்சி கொடுக்கலாம் இது நல்ல தெம்பை கொடுக்கும்.எது காய்ச்சினாலும் கட்டி தட்டாமல் நல்ல பட்டு போல் குழந்தைகளுக்கு சாப்பிட ஈசியாக உள்ளே போவது போல் இருக்கனும். வாயில் குத்தாத கூர்மை இல்லாத ஷாஃப்டான ஸ்பூனால் கொடுக்கவும்.
3.ஆறு மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா டேஸ்டும் சாப்பிட வைத்தால் தான் நாள் போக போக எது கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.
4.முட்டை வேக வைத்து முக்கால் வேக்காடக கொடுக்கலாம், ரொம்ப கல்லு மாதிரி வேகாமல் சிறிது குழ குழப்பாக இருந்தால் நல்லது.
5.எந்த உணவு புதுசா ஆரம்பிப்பதாக இருந்தாலும் காலை 10 லிருந்து 4 கிற்குள் ஆரம்பிக்கவும்.இது பிள்ளைகளுக்கு ஒத்து கொள்கிறதா என்பதை பார்த்து கொள்ள முடியும். இரவில் கொடுத்தால் வயிறு செமிக்க லேட் ஆகும்.பாலே குடித்து கொண்டு இருந்த குழந்தைக்கு தீடீரென திட உணவு ஆரம்பிக்கும் போது இப்படி ஆரம்பிப்பது நல்லது.
6. அதே போல் நெஸ்டம், செரிலாக் கிளறும் போது அதில் ஆப்பில் ஜூஸ், அல்லது சூப் தண்ணீர் ஊற்றி கிளறலாம்.
Saturday, June 6, 2009
பிறந்த குழந்தைக்கு நாப்பிரேஷ் வந்தால்.
1.பிறந்த குழந்தைகளுக்கு எந்த நேரமும் பேம்பரே போடுவதால், போதுமான காற்று இல்லாமல் மூடி வைப்பதாலும் ரேஷ் வருகிறது.அடைத்த மாதிரி ஆகிவிடுகிறது,ஆகையால் இடை இடையே டயப்பர் துணி (அ) மெல்லிய காட்டன் சேலை மற்றும் துப்பட்டாவின் துணியையும் சதுரமாக வெட்டி மடித்து கட்டி விடலாம்.
2. அதே போல் அடிக்கடி மலம் கழித்து கொண்டே இருப்பார்கள்.
அது பின் புறம் தோலோடு ஒட்டி கொள்ளும், ஒரு முறை இரண்டு முறை கழுவலாம், சும்மா கழுவ கூடாது.
3. அதற்கு தேங்காய் எண்ணை (அ) பேபி ஆயிலை நன்கு இடுப்பிற்கு கீழ் முன்னாடி பின்னாடி நல்ல தேய்த்து விட்டு பேம்பரோ துணியோ கட்டுங்கள்.
4. இப்போது நம்பர் டூ போய் விட்டால் காட்டன் பஞ்சை வெண்ணீரில் நனைத்து அப்படியே துடைத்து எடுங்கள், ஒட்டவும் செய்யாது, ரேஷ்ஷும் வராது, கீரிம் பவுடர் எதுவும் போட வேண்டாம் அது யுரின் போகும் இடத்தில் போய் அடைத்து கொள்ளும்.
Wednesday, May 27, 2009
பாலுட்டும் தாய்மார்களுக்கு
1.குழந்தை பிறந்ததும் கூடுமானவரை பார்முலா மில்க் கொடுப்பதை விட தாய் பாலே சிறந்தது.
2. பால் அதிகமாக சுரக்க = ஹார்லிக்ஸ் ,ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும்.
ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.
3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம்.குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது,மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது
4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.
5.தாய்மார்கள் இரண்டு காதுகளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ளவும்.
காலில் என்னேரமும் செருப்பு அனியவும்.
இரவில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ளவும்.
இப்படி செய்வதால் நரம்புகளில் காத்து ஏறுவதை தவிர்க்கலாம்.
6.எலும்புகள் வலுவடைய சிக்கன், மட்டன்,ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை முன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும்.பாலும் நல்ல சுரக்கும்.
7.பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம்,பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும்.இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம்.
8.வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும்.
(இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வள்வாக விழாது.
2. பால் அதிகமாக சுரக்க = ஹார்லிக்ஸ் ,ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும்.
ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.
3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம்.குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது,மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது
4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.
5.தாய்மார்கள் இரண்டு காதுகளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ளவும்.
காலில் என்னேரமும் செருப்பு அனியவும்.
இரவில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ளவும்.
இப்படி செய்வதால் நரம்புகளில் காத்து ஏறுவதை தவிர்க்கலாம்.
6.எலும்புகள் வலுவடைய சிக்கன், மட்டன்,ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை முன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும்.பாலும் நல்ல சுரக்கும்.
7.பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம்,பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும்.இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம்.
8.வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும்.
(இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வள்வாக விழாது.
பச்சிளம் குழந்தையை குளிக்க வைக்கும் போது பாகம் 2
1. பிறந்தகுழந்தைக்கு தலைக்கு ஊற்றும் போது மிகவும் ஜாக்கிரதையாக ஊற்றனும்.
காது , மூக்கு தொண்டையில் தண்ணீர் போகாத வண்ணம் ஊற்றனும்.
நம் காலில் சரிவலாக படுக்க வைத்து ஊற்றினால் இப்படி தன்ணீர் உள்ளே போவதை தவிர்க்கலாம்.
2. இரண்டு காலையும் ஒண்று சேர்த்து சரிவலாக வைத்து கொண்டு குழந்தை தலை மேலே இருக்குமாறு வைத்து கொள்ளவும்.
3. கழுத்திலிருந்து மேலே வரை முதலில் நல்லதேய்த்து ஊற்றி விட்டு பிறகு தலையில் முன் பக்கமாக ஊற்றமால் பின் பக்கமாக ஊற்றவேண்டும்.ஊற்றும் போது இரண்டு காது மற்றும் நெற்றி பக்கம் கையை வைத்து கொண்டு ஊற்றவும்.
4. போன குறிப்பில் சொன்னபடி உடனே ஒரு பெரிய காட்டன் துப்பட்டாவில் சுருட்டி நன்கு பஞ்சை துடைப்பது போல் துடைத்து பவுடர் சிறிது உச்சந்தலையில் வைக்கவும். இது தண்ணீர் நின்றால் அதை எடுத்து விடும்.
5. எக்காரணத்தை கொண்டும் காதில் பட்ஸை போட கூடாது.
ஒரு சிறிய மெல்லிய மல் துணியை நன்கு சுருட்டி காதில் துடைக்கவும்.
6. குழந்தை குளித்து முடித்ததும் உடனே சாம்ராணி புகை மூட்டி அதில் உடம்பு, தலை,கால் போன்றவற்றை காண்பிக்கவும்.
சாம்ப்ராணி புகை காண்பிக்கும்போது மிகவும் கவனமாக பிடித்து கொள்ளுங்கள்.
இல்லை என்றால் துள்ளி விடுவார்கள்.
7. பிறகு நன்கு வயிற்றை நிரைத்து துணியில் சுற்றி உடனே தூங்க வையுங்கள்.
குளித்தால் குழந்தைகள் நல்ல தூங்குவார்கள், நல்ல தூங்கினால் தான் சதை வைக்கும். அமுல் பேபி போல் கொழு கொழு வென இருப்பார்கள்.
காது , மூக்கு தொண்டையில் தண்ணீர் போகாத வண்ணம் ஊற்றனும்.
நம் காலில் சரிவலாக படுக்க வைத்து ஊற்றினால் இப்படி தன்ணீர் உள்ளே போவதை தவிர்க்கலாம்.
2. இரண்டு காலையும் ஒண்று சேர்த்து சரிவலாக வைத்து கொண்டு குழந்தை தலை மேலே இருக்குமாறு வைத்து கொள்ளவும்.
3. கழுத்திலிருந்து மேலே வரை முதலில் நல்லதேய்த்து ஊற்றி விட்டு பிறகு தலையில் முன் பக்கமாக ஊற்றமால் பின் பக்கமாக ஊற்றவேண்டும்.ஊற்றும் போது இரண்டு காது மற்றும் நெற்றி பக்கம் கையை வைத்து கொண்டு ஊற்றவும்.
4. போன குறிப்பில் சொன்னபடி உடனே ஒரு பெரிய காட்டன் துப்பட்டாவில் சுருட்டி நன்கு பஞ்சை துடைப்பது போல் துடைத்து பவுடர் சிறிது உச்சந்தலையில் வைக்கவும். இது தண்ணீர் நின்றால் அதை எடுத்து விடும்.
5. எக்காரணத்தை கொண்டும் காதில் பட்ஸை போட கூடாது.
ஒரு சிறிய மெல்லிய மல் துணியை நன்கு சுருட்டி காதில் துடைக்கவும்.
6. குழந்தை குளித்து முடித்ததும் உடனே சாம்ராணி புகை மூட்டி அதில் உடம்பு, தலை,கால் போன்றவற்றை காண்பிக்கவும்.
சாம்ப்ராணி புகை காண்பிக்கும்போது மிகவும் கவனமாக பிடித்து கொள்ளுங்கள்.
இல்லை என்றால் துள்ளி விடுவார்கள்.
7. பிறகு நன்கு வயிற்றை நிரைத்து துணியில் சுற்றி உடனே தூங்க வையுங்கள்.
குளித்தால் குழந்தைகள் நல்ல தூங்குவார்கள், நல்ல தூங்கினால் தான் சதை வைக்கும். அமுல் பேபி போல் கொழு கொழு வென இருப்பார்கள்.
Monday, May 25, 2009
பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது பாகம் 1
1. பிறந்த பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையாக குளிக்க வைக்க வேன்டும்.
2. சில குழந்தைகள் துள்ளி கொண்டு தண்ணீரில் வழுக்கி விழுந்து விடுவார்கள்.
3. வாரம் ஒரு முறை நல்ல வெது வெதுபான வெண்ணீரில் நல்ல குளிக்கவைக்க்க வேண்டும்.
தினம் குளிக்க வைக்க ஒரு சிறிய சாதம் வைக்கும் பேசின் (அ)சப்பாத்தி மாவு குழைக்கும் தொட்டி போதுமானது.
4. தொட்டியில் பாதியளவு வெண்ணீர் வைத்து அதில் லிக்விட் பேபி பாத் லோஷனை இரண்டு டிராப் விட்டு நன்கு கலக்கி கொள்ளுங்கள், தனியாக ஒரு மக்கில் வெண்ணீர் வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய குட்டி டம்ளர் போட்டு வையுங்கள்.
5.குளிக்க வைக்க்கும் முன் ஒரு மெல்லிய காட்டன் துப்பட்டாவை ரெடியாக உங்கள் தோள் பட்டையில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.குழந்தை குளித்து முடித்ததும் உடனே சுருட்டிக்கொள்ள இது உதவும்.
இது ரூம் அல்ல்து ஹலிலேயே குளிக்க வைக்கலாம்
6.இடது கை ஈரமில்லாமல் இருக்கட்டும் இடது கையால் குழந்தையின் தலையை பிடித்து கொள்ளுங்கள். பாதி அள்வு உள்ள தொட்டில் வெண்ணிரில் குழந்தை உட்காரும் பொசிஷனில்வையுங்கள் தண்ணீர் குழந்தையின் இடுப்பு வரை இருக்கட்டும்.
இப்போது ரொம்ப நேரம் குழந்தையை ஊறவிடாமல் வலது கையால் நன்கு தேய்த்து கை கால் இடுப்பு எல்லாம் தேய்த்து முதுகிலும் தேய்த்து இரண்டு முக்கு கழுத்து வரை முக்கி எடுக்கவும். முகத்தில் அள்ளி ஊற்றாமல் கை விரகளால் தொட்டு துடைக்கவும்.
7. ரொம்ப நேரம் குழந்தைகளை தண்ணீரில் ஊறவிடாமல் சீக்கிரமாக ஊற்றி முடிக்கவும்
8. எல்லாமுடித்து கடைசியில் சுத்தமான வெண்ணீரை சிறிய டம்ளரால் ஊற்றி உடனே பெரிய காட்டன் துப்பாட்டாவில் சுற்றி எடுத்து கொள்ளவும்.
9. மெயினாக ரூமில் பேன் ஏசியை ஆஃப் செய்து விட்டு துடைக்கவும்.
10. கீரிம் அல்லது லோஷன் தடவி நல்ல வயிற்றை நிறைத்து (கண்டிப்பாக குழந்தைக்கு பால் கொடுக்குமுன் தாய் மார்கள் சூடாக காபி (அ) பால் (அ) சூப் குடித்து கொள்ளவும்). தூங்க வைக்கவும்.
11. குழந்தைகள் குளித்தால் நல்ல சுகமாக தூங்குவார்கள்.
நல்ல தூங்கினால் தான் குழந்தைகளுக்கு சதை வைக்கும்.
குறிப்பு:
இதற்கு முன் உள்ள டிப்ஸ் களில் குழந்தை மசாஜ் பற்றி எழுதி இருந்தேன்.
ஒவ்வொரு முறை குளிக்க் வைக்கும் போதும் சிறிது ஆலிவ் ஆயில்(அ) பேபி ஆயில் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வைக்கவும்.
(தொடரும்)
Saturday, May 2, 2009
குழந்தைகளுக்கு மோஷன் பிராப்ளமா?
சில குழந்தைகளுக்கு வயிறு கல் மாதிரி ஆகி மோஷன் டைட்டாடும்.
சரியா மோஷன் போக வில்லை என்றால் குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வாமிட் வருவது போல் இருக்கும்.
வயிற்றில் விளக்கெண்ணையை சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும்.
சூடான வெது வெதுப்பான வெண்ணீரை அடிக்கடி கொடுக்கவும்.
ஒரு தேக்கரண்டி சோம்பை கர்காமல் வறுத்து அத்துடன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து அரை டம்ளராக வற்றவிட்டு அதில் பால் கலந்து சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்.
டீ, காபி குடிக்கும் பிள்ளைகளாக இருந்தால் பாலில் காபி பொடி கலந்து சுக்கு சோம்பு தண்ணீருடன் கலந்து கொடுக்கவும்.
கெட்டியான உணவை தவிர்க்கவும்.
ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும்.
அப்படியும் எப்போதுமே மோஷன் பிராப்ளம் என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிட வில்லை என்றால் ஹல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும்.
சரியா மோஷன் போக வில்லை என்றால் குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வாமிட் வருவது போல் இருக்கும்.
வயிற்றில் விளக்கெண்ணையை சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும்.
சூடான வெது வெதுப்பான வெண்ணீரை அடிக்கடி கொடுக்கவும்.
ஒரு தேக்கரண்டி சோம்பை கர்காமல் வறுத்து அத்துடன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து அரை டம்ளராக வற்றவிட்டு அதில் பால் கலந்து சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்.
டீ, காபி குடிக்கும் பிள்ளைகளாக இருந்தால் பாலில் காபி பொடி கலந்து சுக்கு சோம்பு தண்ணீருடன் கலந்து கொடுக்கவும்.
கெட்டியான உணவை தவிர்க்கவும்.
ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும்.
அப்படியும் எப்போதுமே மோஷன் பிராப்ளம் என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிட வில்லை என்றால் ஹல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும்.
Friday, May 1, 2009
பிறந்த குழந்தைகளின் முகம் மற்றும் உடம்பில் உள்ள முடியை அகற்ற
சில பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முகம் மற்றும் உடம்பு பகுதியில் நிறைய முடிகள் இருக்கும் அதை அகற்ற.
1.முட்டை வெள்ளை கருவில், தாய்ப்பால் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தேய்த்து ஆறிய வென்னீரில் பஞ்சு அல்ல மெல்லிய மல் துணியை நனைத்து துடைத்து எடுக்கவும்.
2. சமீபத்தில் நான் கேள்வி பட்டது கோதுமை மாவில் நெய் கலந்து தேய்த்தாலும் போய் விடும்.
கவனிக்க வேண்டியது:
1. பெண்குழந்தைகளுக்கு புருவத்தில் படாமல் தேய்க்கவும்.
2. ஆண் குழந்தைகளுக்கு தாடி, மீசை வளரும் இடத்தில் படமால் தேய்க்கவும்.
1.முட்டை வெள்ளை கருவில், தாய்ப்பால் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தேய்த்து ஆறிய வென்னீரில் பஞ்சு அல்ல மெல்லிய மல் துணியை நனைத்து துடைத்து எடுக்கவும்.
2. சமீபத்தில் நான் கேள்வி பட்டது கோதுமை மாவில் நெய் கலந்து தேய்த்தாலும் போய் விடும்.
கவனிக்க வேண்டியது:
1. பெண்குழந்தைகளுக்கு புருவத்தில் படாமல் தேய்க்கவும்.
2. ஆண் குழந்தைகளுக்கு தாடி, மீசை வளரும் இடத்தில் படமால் தேய்க்கவும்.
Wednesday, April 22, 2009
பொரி அரிசி
வருத்த வேர்கடலை = அரை கப்
பச்சரிசி = அரை கப்
சர்க்கரை = கால் கப்
வருத்த முந்திரி = ஐந்து
மேல் சொன்ன அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வருத்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
எட்டு மாத குழந்தை முதல் எல்லா வயது குழந்தைகளும் சாப்பிடலாம்.
நல்ல சத்தான கலவை இது
குறிப்பு:
இது சாப்பிடும் போது சிரிக்க பேச வைககாதீர்கல், பொறையேறி விடும்.
இல்லை இதில் சின்ன வாழைபழம் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
சிறிது பாசி பருப்பு வருத்து கலந்து கொண்டால் கூட நல்ல வாசனையாக இருக்கும்.
இல்லை ராகி காய்ச்சும் போது கூட இந்த கலவை ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.
பச்சரிசி = அரை கப்
சர்க்கரை = கால் கப்
வருத்த முந்திரி = ஐந்து
மேல் சொன்ன அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வருத்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
எட்டு மாத குழந்தை முதல் எல்லா வயது குழந்தைகளும் சாப்பிடலாம்.
நல்ல சத்தான கலவை இது
குறிப்பு:
இது சாப்பிடும் போது சிரிக்க பேச வைககாதீர்கல், பொறையேறி விடும்.
இல்லை இதில் சின்ன வாழைபழம் போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.
சிறிது பாசி பருப்பு வருத்து கலந்து கொண்டால் கூட நல்ல வாசனையாக இருக்கும்.
இல்லை ராகி காய்ச்சும் போது கூட இந்த கலவை ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.
Tuesday, April 21, 2009
குழந்தைகளை கீரிச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா?
உங்கள் குழந்தைகளை கிரீச் மற்றும் பேபி கேரில் விட போகிறீர்களா?
பழக்க படாத இடம் போனதும் அழும், ஆகையால் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் விடுங்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டவும்.
அங்கும் புதிதாக போன இடத்தில் சாப்பிட பிடிக்காது.
அதுவும் கொஞ்சம் டைம் எடுக்கும்.
இல்லை நீங்கள் இரண்டு நாட்களுக்கு கூட போய் அங்கு இருங்கள் ஓரளவிற்கு பழக்க படுவார்கள்.
அங்கு இருந்து கொன்டு நீங்கள் அவர்களை கூப்பிட போகும் போது உங்களை பார்த்ததும் சில பிள்ளைகள் கேவி கேவி தொண்டை அடைத்து கொண்டு அழுகை வரும்.
அதற்காக பார்த்து கொள்பவர்களை தப்பாக எண்ண கூடாது.
குழந்தைகளில் பல வகை
சில குழந்தைகள் யார் கிட்ட வேண்டுமனாலும் போவார்கள், சாப்பிட்டு கொள்வார்கள்.
ஆனால் சில குழந்தைகள் யார் புது ஆட்களை பார்த்தாலும் உங்களுடன் வந்து பசை போல் வந்து ஒட்டி கொள்வார்கள்.
சில குழந்தைகள் பேசாமல் இருக்கும் சில குழந்தைகள் யோசித்தபடியே இருக்கும்.
கொஞ்ச நாட்கள் போக போக சரியாகிடும் எப்படியும் ஒரு மாதம் பிடிக்கும் அங்கு அவர்கள் பழகுவதற்கு, அது வரை நீங்கள் பொருமையாக இருக்கவேண்டும்.
பழக்க படாத இடம் போனதும் அழும், ஆகையால் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் விடுங்கள், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டவும்.
அங்கும் புதிதாக போன இடத்தில் சாப்பிட பிடிக்காது.
அதுவும் கொஞ்சம் டைம் எடுக்கும்.
இல்லை நீங்கள் இரண்டு நாட்களுக்கு கூட போய் அங்கு இருங்கள் ஓரளவிற்கு பழக்க படுவார்கள்.
அங்கு இருந்து கொன்டு நீங்கள் அவர்களை கூப்பிட போகும் போது உங்களை பார்த்ததும் சில பிள்ளைகள் கேவி கேவி தொண்டை அடைத்து கொண்டு அழுகை வரும்.
அதற்காக பார்த்து கொள்பவர்களை தப்பாக எண்ண கூடாது.
குழந்தைகளில் பல வகை
சில குழந்தைகள் யார் கிட்ட வேண்டுமனாலும் போவார்கள், சாப்பிட்டு கொள்வார்கள்.
ஆனால் சில குழந்தைகள் யார் புது ஆட்களை பார்த்தாலும் உங்களுடன் வந்து பசை போல் வந்து ஒட்டி கொள்வார்கள்.
சில குழந்தைகள் பேசாமல் இருக்கும் சில குழந்தைகள் யோசித்தபடியே இருக்கும்.
கொஞ்ச நாட்கள் போக போக சரியாகிடும் எப்படியும் ஒரு மாதம் பிடிக்கும் அங்கு அவர்கள் பழகுவதற்கு, அது வரை நீங்கள் பொருமையாக இருக்கவேண்டும்.
Sunday, April 19, 2009
குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்
வெயில் காலங்களில் அதிக சூடு காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால் ஒன்றும் பயப்பட தேவையில்லை.
குழந்தைகள் கொப்புளங்களில் சொரியாமல் பார்த்து கொள்ளவும்.
இல்லை என்றால் அந்த தழும்பு போகவே போகாது.
படுக்கைகள் நல்ல சுத்தமாக வைக்க்வௌம் தினம் மாற்றவும்.
வெள்ளை பெட்சீட்டாக இருந்தால் நல்லது.
வேப்பிலை, பூண்டுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொடுக்கவும். வயிற்றில் உள்ள புண் ஆற.
நிறைய வேப்பிலையை பூச்சிகள் இல்லாமல் தட்டி அதை கட்டாக கட்டி அதனால் அரிப்பு எடுக்கும் இடத்தில் இதமாக வருடி விடவும்.
அசைவம் கொடுக்க வேண்டாம், பால் சாதம், மோர் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் போன்றவை கொடுத்தால் போதும்.
ஓட்ஸ், ராகி போன்ற பானங்களும் கொடுக்கலாம்.
கேரட் ஜூஸ், ஆப்பில் ஜூஸ் , இளநீரும் கொடுக்கலாம்.
ஏழு நாட்கள் (அ) ஒன்பது நாட்கள் (அ) 11 நாட்களில் எல்லாம் சரியாகிடும்.
கொஞ்ச நாட்களுக்கு தழும்பு இருக்கும்.
அதற்கு வேப்பிலையுடன் கொத்துமல்லி தழை,கருவேப்பிலை, மஞ்சள்,சிறிது கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து நல்ல அள்ளி அள்ளி புண்களில் தடவி குளிக்க வைக்கவும்.
குழந்தைகள் கொப்புளங்களில் சொரியாமல் பார்த்து கொள்ளவும்.
இல்லை என்றால் அந்த தழும்பு போகவே போகாது.
படுக்கைகள் நல்ல சுத்தமாக வைக்க்வௌம் தினம் மாற்றவும்.
வெள்ளை பெட்சீட்டாக இருந்தால் நல்லது.
வேப்பிலை, பூண்டுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொடுக்கவும். வயிற்றில் உள்ள புண் ஆற.
நிறைய வேப்பிலையை பூச்சிகள் இல்லாமல் தட்டி அதை கட்டாக கட்டி அதனால் அரிப்பு எடுக்கும் இடத்தில் இதமாக வருடி விடவும்.
அசைவம் கொடுக்க வேண்டாம், பால் சாதம், மோர் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் போன்றவை கொடுத்தால் போதும்.
ஓட்ஸ், ராகி போன்ற பானங்களும் கொடுக்கலாம்.
கேரட் ஜூஸ், ஆப்பில் ஜூஸ் , இளநீரும் கொடுக்கலாம்.
ஏழு நாட்கள் (அ) ஒன்பது நாட்கள் (அ) 11 நாட்களில் எல்லாம் சரியாகிடும்.
கொஞ்ச நாட்களுக்கு தழும்பு இருக்கும்.
அதற்கு வேப்பிலையுடன் கொத்துமல்லி தழை,கருவேப்பிலை, மஞ்சள்,சிறிது கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து நல்ல அள்ளி அள்ளி புண்களில் தடவி குளிக்க வைக்கவும்.
Monday, April 6, 2009
குழந்தை வளர்பு டிப்ஸ், டிப்ஸ்,டிப்ஸ்
இப்போது மாம்பழ சீசன் ஆரம்ப்பிக்கிரது குழந்தைகள் எதை பார்த்தாலும் வாயை திறப்பார்கள் அதுக்குன்னு மாம்பழம் சாப்பிடும பொருள் எல்லாம் வாயில் தடவாதீர்கள்.
இது உடம்பில் புளிப்பு தன்மை ஏற்பட்டு மோஷன் போய் கொண்டே இருக்கும்.
தவழ, எழுந்து நிற்க, நடக்க ஆரம்பிக்கும் போது கையில் கிடைக்கும் அனைத்தையும் வாயில் வைப்பார்கள்.
கொஞ்சம் இந்த ஸ்டேஜில் ஜாக்கிரதையா பார்த்து கொள்ளவும்.
பிறண்டு படுக்கும் வரை பெட்டில் தனியாக போடலாம்.
ஆனால் பிறண்டு படுக்க ஆரம்பித்து தவழும் போது குழந்தை தூங்க தானே செய்கிறது என்று தனியாக விட்டு விட்டு போகாதீர்கள்.
பெட்டில் இருந்து கீழே விழுந்து கண்ட மட்டுக்கும் மண்டை வீங்கி இருக்கும்.
அப்ப்டியே மண்டை வீங்கினால் உடனே அந்த இடத்தை சுற்றி லேசாக விக்ஸ் தடவி விட்டு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வீங்கிய இடத்தில் வைக்கவும்.
அதே போல் அடிக்கடி வாயில் அடிபட்டு ரத்தம் வரும் அதற்கும் ஐஸ் கட்டி தான் எப்போதும் பீரிஜரில் ஐஸ் கட்டிகள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
பெட்டின் ஓரங்களில் தான் அடிக்கடி பல்லை வைத்து கடிப்பார்கள் பல வளரும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது அப்படி கடிக்கும் போது தீடீரென குத்தி கொள்ளும்.
இது உடம்பில் புளிப்பு தன்மை ஏற்பட்டு மோஷன் போய் கொண்டே இருக்கும்.
தவழ, எழுந்து நிற்க, நடக்க ஆரம்பிக்கும் போது கையில் கிடைக்கும் அனைத்தையும் வாயில் வைப்பார்கள்.
கொஞ்சம் இந்த ஸ்டேஜில் ஜாக்கிரதையா பார்த்து கொள்ளவும்.
பிறண்டு படுக்கும் வரை பெட்டில் தனியாக போடலாம்.
ஆனால் பிறண்டு படுக்க ஆரம்பித்து தவழும் போது குழந்தை தூங்க தானே செய்கிறது என்று தனியாக விட்டு விட்டு போகாதீர்கள்.
பெட்டில் இருந்து கீழே விழுந்து கண்ட மட்டுக்கும் மண்டை வீங்கி இருக்கும்.
அப்ப்டியே மண்டை வீங்கினால் உடனே அந்த இடத்தை சுற்றி லேசாக விக்ஸ் தடவி விட்டு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வீங்கிய இடத்தில் வைக்கவும்.
அதே போல் அடிக்கடி வாயில் அடிபட்டு ரத்தம் வரும் அதற்கும் ஐஸ் கட்டி தான் எப்போதும் பீரிஜரில் ஐஸ் கட்டிகள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
பெட்டின் ஓரங்களில் தான் அடிக்கடி பல்லை வைத்து கடிப்பார்கள் பல வளரும் போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது அப்படி கடிக்கும் போது தீடீரென குத்தி கொள்ளும்.
குழந்தைகளுக்கு வயிற்று வலி
குழந்தைகளுக்கு வயிற்று வலி என்றால் மேல் வயிறு முட்டை மாதிரியும், கல்லு மாதிரியும் இருக்கும்.
அதற்கு தொப்புளை சுற்றி விளக்கெண்ணை (அ) தேங்காய் எண்ணை தடவவும்.
சூடான வெண்ணீரை ஆற்றி அப்ப அப்ப இரண்டு ஸ்பூன் கொடுக்கவும்.
அரை டம்ளர் தண்ணீரில் கால் தேக்கரண்டி சோம்பை லேசாகா கருகாமல் வருத்து தண்ணீர் சேர்த்து இரண்டு ஸ்பூனாக வற்றவிட்டு கொடுக்கவும்.
அதற்கு தொப்புளை சுற்றி விளக்கெண்ணை (அ) தேங்காய் எண்ணை தடவவும்.
சூடான வெண்ணீரை ஆற்றி அப்ப அப்ப இரண்டு ஸ்பூன் கொடுக்கவும்.
அரை டம்ளர் தண்ணீரில் கால் தேக்கரண்டி சோம்பை லேசாகா கருகாமல் வருத்து தண்ணீர் சேர்த்து இரண்டு ஸ்பூனாக வற்றவிட்டு கொடுக்கவும்.
Saturday, April 4, 2009
குழந்தைகளின் ஹெல்தி உணவு
தேவையான பொருட்கள்
**********************
பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று
செய்முறை
***********
மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இரக்கி ஆறியதும் உங்கள் செல்ல குழந்தைக்கு ஊட்டி விடுங்கள்
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.
குறிப்பு:
பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்
**********************
பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று
செய்முறை
***********
மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இரக்கி ஆறியதும் உங்கள் செல்ல குழந்தைக்கு ஊட்டி விடுங்கள்
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.
குறிப்பு:
பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்
Tuesday, March 31, 2009
பிலிப்பைனி குழந்தை உணவு
1. பிலிப்பைனி குழந்தை உணவு
உருளை கிழங்கு ஒன்று
பால் கால் டம்ளர்
உருளை கிழங்கை நல்ல குழைய வேக வைத்து அதில் பால் ஊற்றி கலக்கி ஸ்பூனால் செரிலாக் போல் ஊட்டனும்.
===================================================
2. பிலிப்பைனி குழந்தை உணவு
வாழைபழம்
வாழை பழத்தை நல்ல மசித்து ஊட்டி விடனும்.
==================================================
3. பிலிப்பைனி குழந்தை உணவு
முட்டை ஒன்று
அரை வேக்காடாக வேக வைத்து அதை ஸ்பூனால் வழித்து ஊட்டி விடனும்
=================================================
நீங்களே பார்த்து இருப்பீர்கள் பிலைப்பனை குழந்தைகள் நல்ல கொழு கொழுன்னு இருப்பார்கள்
நீங்களும் உங்கள் குழதைகளுக்கு இது போல் முயற்சி செய்து பாருங்கள்.
உருளை கிழங்கு ஒன்று
பால் கால் டம்ளர்
உருளை கிழங்கை நல்ல குழைய வேக வைத்து அதில் பால் ஊற்றி கலக்கி ஸ்பூனால் செரிலாக் போல் ஊட்டனும்.
===================================================
2. பிலிப்பைனி குழந்தை உணவு
வாழைபழம்
வாழை பழத்தை நல்ல மசித்து ஊட்டி விடனும்.
==================================================
3. பிலிப்பைனி குழந்தை உணவு
முட்டை ஒன்று
அரை வேக்காடாக வேக வைத்து அதை ஸ்பூனால் வழித்து ஊட்டி விடனும்
=================================================
நீங்களே பார்த்து இருப்பீர்கள் பிலைப்பனை குழந்தைகள் நல்ல கொழு கொழுன்னு இருப்பார்கள்
நீங்களும் உங்கள் குழதைகளுக்கு இது போல் முயற்சி செய்து பாருங்கள்.
Friday, March 27, 2009
எஜிப்ஷியன் குழந்தை உணவு, ஆத்ஸ் சோர்பா
இது எஜிப்ஷியன் பிஸியோதரபி டாக்டர் அவங்க குழந்தைக்கு செய்வதை சொல்லி கொடுத்தார்கள். நானும் நம் இந்தியன் உண்வை (பூரி கிழங்கும், கேசரி கேக்கும் )அவங்களுக்கு சொல்லி கொடுத்தேன். இது எகிப்து நாட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவாகும். ஆறு மாததிலிருந்து இதை கொடுக்கலாம்.
ஆத்ஸ் சோர்பா
தேவையான பொருட்கள்
***********************
துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - ஒன்று சிறியது
உருளை கிழங்கு - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தக்காளி - அரை பழம் சிறியது
செய்முறை
***********
1. கேரட், தக்காளி,உருளையை தோல் நீக்கி பொடியாக அரிந்து வைக்கவும்.
2. பருப்பை நன்கு களைந்து அதில் பொடியாக அரிந்த தக்காளி கேரட்,உருளை,மிளகு தூள்,உப்பு தூல், பூண்டையையும் பொடியாக நருக்கி போட்டு நன்கு குழைய வேக விடவும்.
3.வெந்ததும் அதை பிளெண்டரில் மையாக அரைத்து குழந்தைகளுக்கு செரிலாக் போல் ஊட்டி விடவும்
குறிப்பு:
சில குழந்தைகளுக்கு என்ன புட் கொடுபப்து என்றே தெரியாது, கொடுத்ததே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகளுக்கு வெருந்த்து விடும் ஏதாவது டிபெரெண்டா கொடுத்தால் அந்த டேஸ்டுக்கே கூட கொஞ்சம் சாபிடுவார்கள்.
ஆத்ஸ் சோர்பா
தேவையான பொருட்கள்
***********************
துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - ஒன்று சிறியது
உருளை கிழங்கு - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தக்காளி - அரை பழம் சிறியது
செய்முறை
***********
1. கேரட், தக்காளி,உருளையை தோல் நீக்கி பொடியாக அரிந்து வைக்கவும்.
2. பருப்பை நன்கு களைந்து அதில் பொடியாக அரிந்த தக்காளி கேரட்,உருளை,மிளகு தூள்,உப்பு தூல், பூண்டையையும் பொடியாக நருக்கி போட்டு நன்கு குழைய வேக விடவும்.
3.வெந்ததும் அதை பிளெண்டரில் மையாக அரைத்து குழந்தைகளுக்கு செரிலாக் போல் ஊட்டி விடவும்
குறிப்பு:
சில குழந்தைகளுக்கு என்ன புட் கொடுபப்து என்றே தெரியாது, கொடுத்ததே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகளுக்கு வெருந்த்து விடும் ஏதாவது டிபெரெண்டா கொடுத்தால் அந்த டேஸ்டுக்கே கூட கொஞ்சம் சாபிடுவார்கள்.
Sunday, March 22, 2009
குழந்தைகளை தூங்க வைக்கும் போது
1. குழந்தைகளை கையிலேயே வைத்து பழக்கப் படுத்ததீர்கள்.
2. எவ்வளவுக்கு எவ்வளவு கீழே போட்டு பழக்க படுத்து கிறீர்களோ அவ்வளவு நல்லது.
3. கை சுகம் கண்டு விட்டால் பிறகு எந்த வேலையும் செய்ய முடியாது.எங்கும் நகர விட மாட்டார்கள்.
4. கீழே அவர்களை போட்டு கையை காலை நல்லா ஆட்ட விடனும், அது நல்ல உடற்பயிற்சியும் கூட.
5. குழந்தைகள் நல்ல தூங்கினால் நல்லது.
6. சரியாக தூங்காமல் ஒரே அழுது கொண்டு இருந்தால் வயிறு சரியாக நிறைந்திருகாது.
அப்போது தாய் பாலுடன் ஏதாவது பக்க உணவும் ஆரம்பியுங்கள்.
2. எவ்வளவுக்கு எவ்வளவு கீழே போட்டு பழக்க படுத்து கிறீர்களோ அவ்வளவு நல்லது.
3. கை சுகம் கண்டு விட்டால் பிறகு எந்த வேலையும் செய்ய முடியாது.எங்கும் நகர விட மாட்டார்கள்.
4. கீழே அவர்களை போட்டு கையை காலை நல்லா ஆட்ட விடனும், அது நல்ல உடற்பயிற்சியும் கூட.
5. குழந்தைகள் நல்ல தூங்கினால் நல்லது.
6. சரியாக தூங்காமல் ஒரே அழுது கொண்டு இருந்தால் வயிறு சரியாக நிறைந்திருகாது.
அப்போது தாய் பாலுடன் ஏதாவது பக்க உணவும் ஆரம்பியுங்கள்.
Sunday, March 15, 2009
குழந்தைகளுக்கு பால் மற்றும் தயிர் சாதம்
1. குழந்தைகளுக்கு பால் சாதம் கொஞ்சம வாழைபழம் சேர்த்து ஆறு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறையாவது கொடுத்து பழகவும்.
2. அதே போல் தயிர் மற்றும் மோர் சாதமும் எட்டு மாதத்திலிருந்து கொடுத்து பழகவும்.
3. தயிர் மோர் புளிப்பில்லாததாக இருக்கனும். தயிர் சதம் செய்யும் போது பால் முக்கால் பாகமும், தயிர் கால் பாகமும் சேர்த்து செய்து கொடுக்கவும்.
இது சாப்பிட ஈசியாக இருக்கும்.
4. குழந்தைகள் ஓடி ஆடி அங்க இங்க இடித்து கீழே விழுந்தால் வாயில் அடி பட்டு சாப்பிட முடியாது இது போல் காரம் இல்லாததாக இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
5. வயிற்று போக்கு சமையத்திலும் இந்த சாப்பாடு கொடுக்கலாம். சில பேருக்கு அந்த நேரத்தில் என்ன கொடுப்பது என்றே தெரியாது.
6. இப்படி கொடுப்பதால் உடல் சூடும் தனியும், தயிர் மற்றும் மோர் சாதம் மதியமும், பால் சாதம் இரவும் கொடுக்கலாம்.
ஜலீலா
2. அதே போல் தயிர் மற்றும் மோர் சாதமும் எட்டு மாதத்திலிருந்து கொடுத்து பழகவும்.
3. தயிர் மோர் புளிப்பில்லாததாக இருக்கனும். தயிர் சதம் செய்யும் போது பால் முக்கால் பாகமும், தயிர் கால் பாகமும் சேர்த்து செய்து கொடுக்கவும்.
இது சாப்பிட ஈசியாக இருக்கும்.
4. குழந்தைகள் ஓடி ஆடி அங்க இங்க இடித்து கீழே விழுந்தால் வாயில் அடி பட்டு சாப்பிட முடியாது இது போல் காரம் இல்லாததாக இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
5. வயிற்று போக்கு சமையத்திலும் இந்த சாப்பாடு கொடுக்கலாம். சில பேருக்கு அந்த நேரத்தில் என்ன கொடுப்பது என்றே தெரியாது.
6. இப்படி கொடுப்பதால் உடல் சூடும் தனியும், தயிர் மற்றும் மோர் சாதம் மதியமும், பால் சாதம் இரவும் கொடுக்கலாம்.
ஜலீலா
Monday, March 9, 2009
குழந்தைகளுக்கு வயிற்று போக்கு
ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதம்வரை அடிக்கடி வயிற்று போக்கு வரும்.
பல் முளைக்க ஆரம்பித்ததிலிருந்து, தவழு போது எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கும் வரை
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது எதை பார்த்தாலும் நர நர என்று கடிப்பார்கள்.
பெட்டின் ஓரம்,சுவர்,எல்ல பொருட்கள் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் கடித்து கொண்டே இருப்பார்கள்.
அப்போது எதையாவது எடுத்து வாயில் போட்டு உடனே தொடர்ந்து வயிற்று போக்கு ஆரம்பித்து விடும்.
வெறும் தாய் பால் கொடுப்பவர்கள் அவர்கள் முன்று வேளைக்கு வெரும் பிரெட் ஹார்லிக்ஸ் பால் சேர்க்காமல் சாப்பிட்டால் போதும்.
இன்னும் ஒரு மூன்று நாளைக்கு உணவு லைட்டானா உணவு சாப்பிட்டால் போதும்.
அப்படி செரிலாக்,முட்டை வெள்ளை கரு, நெஸ்டம், இன்னும் வீட்டு உணவுகளை சில பேர் 4, 5 மாதத்திலிருந்தே கொடுக்க பழக்க படுத்துவார்கள். அவர்கள்
1. ஆறிய வெண்ணீர் நிறைய கொடுக்கனும்.
2. வெண்ணீரில் குலுக்கோஸ் சேர்த்து சிறிது உப்பு போட்டு கரைத்து கொடுக்கலாம்.
3.அர்ரோட் மாவு கஞ்சி இது தான் உடனே கேட்கும், அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்வது.
அர்ரோட் மாவு கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.
அர்ரோட் மாவு பிஸ்கேட் வெண்ணீரில் அல்லது லேசாக லைட்டாக போட பப்பட்ட பிளாக் டீயில் ஊறவைத்து கொடுக்கலாம்.
4.இல்லை வெரும் நெஸ்டம் கொடுக்கலாம்.
5.கோதுமை களி காய்ச்சி கொடுக்கலாம்.
6.கேரட் ஆப்பில் வேகவைத்து நன்கு மிக்சியில் அரைத்தும் ஊட்டி விடாலாம்.
ஜலீலா
(தொடரும்)
பல் முளைக்க ஆரம்பித்ததிலிருந்து, தவழு போது எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கும் வரை
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது எதை பார்த்தாலும் நர நர என்று கடிப்பார்கள்.
பெட்டின் ஓரம்,சுவர்,எல்ல பொருட்கள் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் கடித்து கொண்டே இருப்பார்கள்.
அப்போது எதையாவது எடுத்து வாயில் போட்டு உடனே தொடர்ந்து வயிற்று போக்கு ஆரம்பித்து விடும்.
வெறும் தாய் பால் கொடுப்பவர்கள் அவர்கள் முன்று வேளைக்கு வெரும் பிரெட் ஹார்லிக்ஸ் பால் சேர்க்காமல் சாப்பிட்டால் போதும்.
இன்னும் ஒரு மூன்று நாளைக்கு உணவு லைட்டானா உணவு சாப்பிட்டால் போதும்.
அப்படி செரிலாக்,முட்டை வெள்ளை கரு, நெஸ்டம், இன்னும் வீட்டு உணவுகளை சில பேர் 4, 5 மாதத்திலிருந்தே கொடுக்க பழக்க படுத்துவார்கள். அவர்கள்
1. ஆறிய வெண்ணீர் நிறைய கொடுக்கனும்.
2. வெண்ணீரில் குலுக்கோஸ் சேர்த்து சிறிது உப்பு போட்டு கரைத்து கொடுக்கலாம்.
3.அர்ரோட் மாவு கஞ்சி இது தான் உடனே கேட்கும், அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்வது.
அர்ரோட் மாவு கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.
அர்ரோட் மாவு பிஸ்கேட் வெண்ணீரில் அல்லது லேசாக லைட்டாக போட பப்பட்ட பிளாக் டீயில் ஊறவைத்து கொடுக்கலாம்.
4.இல்லை வெரும் நெஸ்டம் கொடுக்கலாம்.
5.கோதுமை களி காய்ச்சி கொடுக்கலாம்.
6.கேரட் ஆப்பில் வேகவைத்து நன்கு மிக்சியில் அரைத்தும் ஊட்டி விடாலாம்.
ஜலீலா
(தொடரும்)
Saturday, February 28, 2009
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு
1. தினமும் ஒரு பத்தை தேங்காயும், நான்கு பாதம் இரவே ஊறவைத்துகாலையில் தோலை நீக்கி விட்டு கொடுங்கள்.
2. அடுத்து அக்ரூட் என்கிற வால் நட்டையும் கொடுக்கவும், அதன் தோற்றம் மூளையை போன்று இருக்கும் இதுவும் மூளை வளர்ச்சிக்கு மிக்க நல்லது.
3. வால்நட் சிறிது கசக்கும் அதனுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொடுக்கவும்.
4. பல் முளைத்ததும்,நன்கு கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் கொடுக்கவும்.
5. கடித்து சாப்பிடாத பிள்ளை களுக்கு நன்கு மையாக அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.
(தொடரும்)
2. அடுத்து அக்ரூட் என்கிற வால் நட்டையும் கொடுக்கவும், அதன் தோற்றம் மூளையை போன்று இருக்கும் இதுவும் மூளை வளர்ச்சிக்கு மிக்க நல்லது.
3. வால்நட் சிறிது கசக்கும் அதனுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொடுக்கவும்.
4. பல் முளைத்ததும்,நன்கு கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் கொடுக்கவும்.
5. கடித்து சாப்பிடாத பிள்ளை களுக்கு நன்கு மையாக அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.
(தொடரும்)
தால்
தேவையான பொருட்கள்
வேக வைக்க
-------------
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது+
தாளிக்க
--------
வெங்காயம் - அரை பொடியாக நறுக்கியது
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்லு
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்து மல்லி - சிறிது மேலே தூவ
எண்ணை - இரண்டு டீஸ்பூன்
நெய் -ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்
செய்முறை
பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து ஆற வைத்து மிக்சியில் அல்லது பிளென்டரில் ஒரு திருப்பு (மையாக அரைக்கவேண்டாம்).
மிக்சியில் அடித்ததை உப்பு, கொத்து மல்லி போட்டு ஒர் கொதி கொதித்து இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ள்வும்.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய் போட்டு அரை வெங்காயத்தை வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கருவேப்பிலை பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்டவேண்டும்.
கடைசீயில் நெய் ஒர் ஸ்பூன் ஊற்றி இரக்கவும்.
குறிப்பு:
பிள்ளைகளுக்கு வெறும் சாதத்தில் இந்த பருப்பை ஊற்றிக்கொடுத்தால் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈசியான முறை எளிதில் தயாரிக்கக் கூடியது.
ஜலீலா, துபாய்
வேக வைக்க
-------------
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது+
தாளிக்க
--------
வெங்காயம் - அரை பொடியாக நறுக்கியது
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்லு
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்து மல்லி - சிறிது மேலே தூவ
எண்ணை - இரண்டு டீஸ்பூன்
நெய் -ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்
செய்முறை
பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து ஆற வைத்து மிக்சியில் அல்லது பிளென்டரில் ஒரு திருப்பு (மையாக அரைக்கவேண்டாம்).
மிக்சியில் அடித்ததை உப்பு, கொத்து மல்லி போட்டு ஒர் கொதி கொதித்து இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ள்வும்.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய் போட்டு அரை வெங்காயத்தை வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கருவேப்பிலை பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்டவேண்டும்.
கடைசீயில் நெய் ஒர் ஸ்பூன் ஊற்றி இரக்கவும்.
குறிப்பு:
பிள்ளைகளுக்கு வெறும் சாதத்தில் இந்த பருப்பை ஊற்றிக்கொடுத்தால் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈசியான முறை எளிதில் தயாரிக்கக் கூடியது.
ஜலீலா, துபாய்
குழந்தையின் ரிச் உணவு
தேவையான பொருட்கள்
ஆப்பில் - ஒன்று
பேரிச்சை - முன்று
நேந்திரம் பழம் - ஒன்று
செய்முறை
ஆப்பிலை நாலாக அரிந்து நடுவில் உள்ள கொட்டையை நீக்கவும்.
நேந்திரம் பழம் தோலுரித்து நன்காக கட் பண்ணவும்.
பேரிச்சையில் உள்ள கொட்டைகளை நீக்கவும்.
முன்றையும் இட்லி பானையில் அவித்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கொடுக்கவும்.
இதை ஒரு பவுளில் வைத்து குத்தாதா ஸ்பூனினால் அல்லது ஒரு விரலால் எடுத்து நாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தடவவும்.
ஒரேயடியாக கொடுக்க கூடாது, இது நான்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம், பெரிய வளர்ந்த பிள்ளைகள் என்றால் இரண்டு பிள்ளைகளுக்கு கொடுகலாம்.
இது மிகவும் சத்தான உணவு.
ஜலீலா
ஆப்பில் - ஒன்று
பேரிச்சை - முன்று
நேந்திரம் பழம் - ஒன்று
செய்முறை
ஆப்பிலை நாலாக அரிந்து நடுவில் உள்ள கொட்டையை நீக்கவும்.
நேந்திரம் பழம் தோலுரித்து நன்காக கட் பண்ணவும்.
பேரிச்சையில் உள்ள கொட்டைகளை நீக்கவும்.
முன்றையும் இட்லி பானையில் அவித்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கொடுக்கவும்.
இதை ஒரு பவுளில் வைத்து குத்தாதா ஸ்பூனினால் அல்லது ஒரு விரலால் எடுத்து நாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தடவவும்.
ஒரேயடியாக கொடுக்க கூடாது, இது நான்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம், பெரிய வளர்ந்த பிள்ளைகள் என்றால் இரண்டு பிள்ளைகளுக்கு கொடுகலாம்.
இது மிகவும் சத்தான உணவு.
ஜலீலா
குழந்தைகளின் டானிக்
உங்கள் குழந்தைகள் அமுல் பேபி போல் கொழு கொழு என்று ஆகனுமா இதோ இதை டிரை பன்ணுங்க
குழந்தைகளின் டானிக்
தேவையான பொருட்கள்
***********************
பொட்டு கடலை - ஐம்பது கிராம்
நாட்டு சர்க்கரை - இருபதைந்து கிராம்
பூவன் வாழைபழம் - இரன்டு
செய்முறை
*************
1. பொட்டு கடலையை கரியாமல் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
2. பொட்டுகடலை ஆறியதும் மிக்ஸியில் பொடித்துபொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து அதைலிருந்து இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து கொள்ள வேண்டியது.
3. அதில் நாட்டு சர்க்கரையை மன்னில்லால் எடுத்து கலக்கி பூவன் வாழைபழத்தை பிசைந்து கொடுக்கவும்.
4. நாட்டு சர்க்கரை கிடைக்காவிட்டால் சாதா சர்க்கரை போதும்.
5. இதை கொடுத்து கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் கொடுங்கள்.
குறிப்பு:
ஆறு மாதத்திலிருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் பொட்டு கடலை ,சர்க்கரை, கொஞ்சம் மிளகு திரித்து வைத்து சாப்பிட கொடுத்தால் சளி இருமலும் கேட்கும்.
கொஞ்சம் சோம்பு சேர்த்து கொண்டாலும் வயிற்றுவலிக்கு கூட கேட்கும்.
இதை வழமையாக கொடுத்து வந்தால் உங்கள் குழந்தை அமுல் பேபி போல் கொழு கொழு என இருப்பார்கள்.
ஜலீலா
குழந்தைகளின் டானிக்
தேவையான பொருட்கள்
***********************
பொட்டு கடலை - ஐம்பது கிராம்
நாட்டு சர்க்கரை - இருபதைந்து கிராம்
பூவன் வாழைபழம் - இரன்டு
செய்முறை
*************
1. பொட்டு கடலையை கரியாமல் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
2. பொட்டுகடலை ஆறியதும் மிக்ஸியில் பொடித்துபொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து அதைலிருந்து இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து கொள்ள வேண்டியது.
3. அதில் நாட்டு சர்க்கரையை மன்னில்லால் எடுத்து கலக்கி பூவன் வாழைபழத்தை பிசைந்து கொடுக்கவும்.
4. நாட்டு சர்க்கரை கிடைக்காவிட்டால் சாதா சர்க்கரை போதும்.
5. இதை கொடுத்து கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் கொடுங்கள்.
குறிப்பு:
ஆறு மாதத்திலிருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் பொட்டு கடலை ,சர்க்கரை, கொஞ்சம் மிளகு திரித்து வைத்து சாப்பிட கொடுத்தால் சளி இருமலும் கேட்கும்.
கொஞ்சம் சோம்பு சேர்த்து கொண்டாலும் வயிற்றுவலிக்கு கூட கேட்கும்.
இதை வழமையாக கொடுத்து வந்தால் உங்கள் குழந்தை அமுல் பேபி போல் கொழு கொழு என இருப்பார்கள்.
ஜலீலா
குழந்தைகளின் ஹெல்தி உணவு
தேவையான பொருட்கள்
பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று
செய்முறை
மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர்க்கி உங்கள் செல்ல குழந்தைக்கு இதை முதல் முதல் ஆரம்பியுங்கள்.
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.
பிறகு கொஞ்ச கொஞ்சமாகா உருளை கேரட் வேக வைத்து சேர்த்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்.
பொட்டுகடலை - முன்று மேசை கரண்டி
அரிசி - ஒன்னறை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்னறை மேசை கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - முன்று
செய்முறை
மேலே குறிப்புட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்கவைத்து இந்த பொடியை ஒரு மேசை கரண்டி போட்டு கிளறிகொண்டே இருங்கள் கட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இர்க்கி உங்கள் செல்ல குழந்தைக்கு இதை முதல் முதல் ஆரம்பியுங்கள்.
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.
பிறகு கொஞ்ச கொஞ்சமாகா உருளை கேரட் வேக வைத்து சேர்த்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதி யாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டு படுத்தும். சோம்பு செமிக்கவைக்கும்.
ஹெல்தி கஞ்சி
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - இரண்டு தேக்கரண்டி
பாதம் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
பிளெயின் குளுகோஸ் - முன்று தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக
செய்முறை
தண்ணீரில் பால்,பாதம் பவுடர்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் காய்ச்சி அதில் பால், குளுக்கோஸ் சேர்த்து கொடுக்கவும்.
குறிப்பு:
ஓட்ஸ்,பாதம் எல்லாம் திரித்து வைத்து கொள்ள வேண்டியது. பிள்ளைகளுக்கு உடம்புக்கு முடியாத போது செய்து கொடுக்கலாம்.
ஜலீலா
ஓட்ஸ் - இரண்டு தேக்கரண்டி
பாதம் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
பிளெயின் குளுகோஸ் - முன்று தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக
செய்முறை
தண்ணீரில் பால்,பாதம் பவுடர்,உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு அடுப்பில் வைத்து கை விடாமல் காய்ச்சி அதில் பால், குளுக்கோஸ் சேர்த்து கொடுக்கவும்.
குறிப்பு:
ஓட்ஸ்,பாதம் எல்லாம் திரித்து வைத்து கொள்ள வேண்டியது. பிள்ளைகளுக்கு உடம்புக்கு முடியாத போது செய்து கொடுக்கலாம்.
ஜலீலா
Tuesday, February 24, 2009
குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது
1.குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது ஒரு பெரிய வெள்ளை நாப்கின் (அ) காட்டன் துணியை கழுத்தில் கட்டி கொள்ளுங்கள்.
2. இல்லை என்றால் போட்டு இருக்கும் டிரெஸ் நஸ்தியாகும் அதுவும் இல்லாமல் விளையாடி விளையாடி சாப்பாடு தண்ணீர் எல்லாம் மேலெ கொட்டி சாப்பிடுவர்கள், நெஞ்சில் சளி கட்டும்.
3. இப்படி நப்கின் கட்டி கொண்டு பழக்கிட்டு அப்ப அப்ப தொடச்சிக்கொ என்று சொல்லி பழக்கனும் .கொடுத்து முடித்தும் அதை கழட்டி தனியாக அலசி போட்டு கொள்ளலாம்.
4.டிரெஸ் வீனாகாது ஒவ்வொரு முறை சாப்படு, ராகி செரிலாக் கொடுக்கும் போது இப்படி செய்யலாம்.
5.குழந்தைகள் துணியை துவைக்க தனியாக ஒரு சிறிய தொட்டி வைத்து கொள்ளுங்கள்.
ஜலீலா
2. இல்லை என்றால் போட்டு இருக்கும் டிரெஸ் நஸ்தியாகும் அதுவும் இல்லாமல் விளையாடி விளையாடி சாப்பாடு தண்ணீர் எல்லாம் மேலெ கொட்டி சாப்பிடுவர்கள், நெஞ்சில் சளி கட்டும்.
3. இப்படி நப்கின் கட்டி கொண்டு பழக்கிட்டு அப்ப அப்ப தொடச்சிக்கொ என்று சொல்லி பழக்கனும் .கொடுத்து முடித்தும் அதை கழட்டி தனியாக அலசி போட்டு கொள்ளலாம்.
4.டிரெஸ் வீனாகாது ஒவ்வொரு முறை சாப்படு, ராகி செரிலாக் கொடுக்கும் போது இப்படி செய்யலாம்.
5.குழந்தைகள் துணியை துவைக்க தனியாக ஒரு சிறிய தொட்டி வைத்து கொள்ளுங்கள்.
ஜலீலா
குழந்தைகளுக்கு பேம்பருக்கு பதில்
1. குழந்தைகளுக்கு பேம்பருக்கு பதில் நேப்கின்னை பயன் படுத்துங்கள்.
2. அது வெள்ளை கலர் பெரிய சதுர வடிவ நாப்கீனை மடித்து வைத்து பிளாஸ்கிட் அதன் மேல் போடு ஜட்டியும் இருக்கிறது அதை பயன் படுத்தலாம்.
3. இதனால் தேவையில்லாத ரேஷிலிருந்து பாது காத்து கொள்ளலாம்.
4. ஒரு நாளைக்கு நான்கு இருந்தால் கூட போதும், மொத்தமா ஊறவைத்து துவைத்து கொள்ளலாம்.
5. படத்தில் காட்டியுள்ளபடி செய்து பயன் படுத்தவும்.
ஜலீலா
Wednesday, February 18, 2009
சில குழந்தைகள் சத்தி எடுத்து கொண்டே இருக்கும்
1 . சில குழந்தைகள் சத்தி எடுத்து கொண்டே இருக்கும்.அது பால் கொடுத்ததும் சரியா தட்டி ஏப்பம் விட வைக்காததால் தான் இப்படி சத்தி வரும்.
2. இல்லை தலையில் பேன் இருக்கான்னு பாருங்கள்.
3. நிறைய குழந்தைகள், எல்லாம் தூக்குவார்கள் அவர்களிடம் இருந்து ஒட்டி கொள்ளுங்கள்.
4. அப்படி சத்தி எடுக்கும் குழந்தைகளை தூக்கும் போதோ, மற்ற ஆண்கள் கையில் கொடுக்கும் போதோ கையோடு ஒரு பெரிய டவலையும் சேர்த்து கொடுங்கள்.
5. தோள் பட்டையில் போடும் போது அந்த டவலை போட்டு கொண்டு பிறகு ஏப்பத்துக்கு தட்டி கொடுங்கள்.
6. சத்தி எடுப்பது நல்லது சளி இருந்தால் வெளியாகும்.
ஜலீலா
2. இல்லை தலையில் பேன் இருக்கான்னு பாருங்கள்.
3. நிறைய குழந்தைகள், எல்லாம் தூக்குவார்கள் அவர்களிடம் இருந்து ஒட்டி கொள்ளுங்கள்.
4. அப்படி சத்தி எடுக்கும் குழந்தைகளை தூக்கும் போதோ, மற்ற ஆண்கள் கையில் கொடுக்கும் போதோ கையோடு ஒரு பெரிய டவலையும் சேர்த்து கொடுங்கள்.
5. தோள் பட்டையில் போடும் போது அந்த டவலை போட்டு கொண்டு பிறகு ஏப்பத்துக்கு தட்டி கொடுங்கள்.
6. சத்தி எடுப்பது நல்லது சளி இருந்தால் வெளியாகும்.
ஜலீலா
Sunday, February 15, 2009
குழந்தை வளர்பும் உணவும்.
1. குழந்தை பிறந்து முன்று மாதங்களுக்கு தாய் பால் கொடுப்பது தான் சிறந்தது.
2. அப்ப கொஞ்சமா நன்கு காய்ச்சி ஆறிய வெண்ணீர் ஒரு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்.
3. குழந்தைகளுக்கு உண்வு தயாரிக்க தனியாக சாமான்களை பயன்படுத்தவும்.(வடிகட்டி, ஸ்பூன்,வெண்ணீர் போடும் பாத்திரம்)
குழந்தைகள் பாத்திரத்தை தேய்க்கவும் தனியாக சாமான் தேய்க்கும் நார் பயன் படுதவும்.
4. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்குகிறார்களோ அவ்வளவு உடம்பிற்கு ரொம்ப நல்லது.சும்மா கையில் தூக்கி தூக்கி அவரகள் உடம்பை குலைக்க கூடாது.
5. கீழே ஷீட்டில் டவலை விரித்து அதில் படுக்க வைத்து நல்ல கைய கால ஆட்ட விடனும்.
6. அது அவர்களுக்கானா உடற்பயிற்சியும் கூட.
7. தொட்டிலில் போட்டு ஆட்டி பழக்க படுத்தாதீர்கள்.
ஜலீலா
(தொடரும்)
குழந்தை வளர்பு
குழந்தை பிறந்ததுமே எல்லோருக்கும் சந்தோஷம் தான் ஆனால் வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு ஒன்னும் புரியாமல் இருப்பார்கள்.
அதற்கு எனக்கு தெரிந்த குழந்தையின் உண்வு வகைகளை இங்கு கொடுகக் இருக்கிறேன்.
இது என் இரண்டு பிள்ளைகளை வளர்த்த அனுபவமும்.
7 வருடம் பேபி கேர் பார்த்த அனுபவமும் இந்த பிலாக் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பேபி கேர் மூலம், பல குழந்தைகளுடன் பழகியதால் அதில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளுடன் பட்ட அனுபவத்தை தான் டிப்ஸ கொடுக்கிறேன்.
எல்லோரும் படித்து பயன் பெறவேண்டும் என்பது என்னுடைய ஆசை.
ஜலீலா
அதற்கு எனக்கு தெரிந்த குழந்தையின் உண்வு வகைகளை இங்கு கொடுகக் இருக்கிறேன்.
இது என் இரண்டு பிள்ளைகளை வளர்த்த அனுபவமும்.
7 வருடம் பேபி கேர் பார்த்த அனுபவமும் இந்த பிலாக் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பேபி கேர் மூலம், பல குழந்தைகளுடன் பழகியதால் அதில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளுடன் பட்ட அனுபவத்தை தான் டிப்ஸ கொடுக்கிறேன்.
எல்லோரும் படித்து பயன் பெறவேண்டும் என்பது என்னுடைய ஆசை.
ஜலீலா
Subscribe to:
Posts (Atom)