Saturday, February 28, 2009

தால்

தேவையான பொருட்கள்

வேக வைக்க
-------------
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது+
தாளிக்க
--------
வெங்காயம் - அரை பொடியாக நறுக்கியது
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்லு
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்து மல்லி - சிறிது மேலே தூவ
எண்ணை - இரண்டு டீஸ்பூன்
நெய் -ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்

செய்முறை

பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து ஆற வைத்து மிக்சியில் அல்லது பிளென்டரில் ஒரு திருப்பு (மையாக அரைக்கவேண்டாம்).
மிக்சியில் அடித்ததை உப்பு, கொத்து மல்லி போட்டு ஒர் கொதி கொதித்து இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ள்வும்.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய் போட்டு அரை வெங்காயத்தை வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கருவேப்பிலை பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்டவேண்டும்.
கடைசீயில் நெய் ஒர் ஸ்பூன் ஊற்றி இரக்கவும்.


குறிப்பு:

பிள்ளைகளுக்கு வெறும் சாதத்தில் இந்த பருப்பை ஊற்றிக்கொடுத்தால் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈசியான முறை எளிதில் தயாரிக்கக் கூடியது.

ஜலீலா, துபாய்

No comments: